திருப்பூர், நவ. 14 – திருப்பூரில் வரும் 27ஆம் தேதி ஞாயிறன்று நடை பெறும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செந் தொண்டர் பேரணி பொதுக் கூட்டத்தில்,வேலம் பாளையம் நகரில் இருந்து திரளானோர் பங்கேற்பதென ஆயத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அணைப்பாளையத்தில் ஞாயிறன்று நடைபெற்ற முன்தயாரிப்பு பேரவையில் ரங்கநாதபுரம் ஏ கிளைச் செய லாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர்கள் த.நாகராஜன், வி.லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் செந் தொண்டர் பேரணி பொதுக் கூட்டத்தில் குடும்பத்துடன் கட்சி அணியினர் பங்கேற்பது, செந்தொண்டர் பயிற்சி அளிப்பது, தீக்கதிர் சந்தா புதுப்பித்து, ஒப்படைப்பது என தீர்மா னிக்கப்பட்டது.