ஈரோடு, மார்ச் 17- ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நடை பெற்றது. இக்கருத்தரங்கிற்கு, காப்பீட்டு கழக ஊழி யர் சங்க ஈரோடு தெற்கு கோட்ட நிர்வாகி வி.ராஜகோ பால் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் சி.பரமசிவம் வரவேற்றார். “ஏப்ரல் 5 தில்லி பேரணியும், நமது கடமைகளும்” என்ற தலைப்பில் மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளன செயல் தலைவர் எம். துரைபாண்டியன் கருத்துரையாற்றினார். பெபி (வங்கி ஊழியர் சம்மேளனம்) மாநில துணைத்தலைவர் எஸ்.ஏ. ராஜேந்திரன், “2023 பட்ஜெட்டும் - நமது பார்வையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் ச.விஜயமனோகரன், பிஎஸ்என்எல் இயு மாவட்ட செயலாளர் எஸ்.பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்த னர். நிறைவாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆர்.மணி நன்றி கூறினார். இதில், திரளானோர் பங்கேற்றனர்.