districts

பாஜக பேச்சாளராக மாறிய சீமான்: ஐவாஹிருல்லா சாடல்

உதகை, ஆக.2- ஆர்எஸ்எஸ், பாஜகவின் பேச்சா ளராக நாம் தமிழர் கட்சியின் சீமான் மாறியுள்ளதாக முஸ்லிம் முன் னேற்ற கழக மாநிலத் தலைவர் ஐவா ஹிருல்லா எம்எல்ஏ சாடியுள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் மனித நேய வணிகர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழக மாநிலத் தலைவர் ஜவா ஹிருல்லா எம்எல்ஏ கலந்து கொண்டு  பேசினார். இதன்பின் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தமிழ் நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம் அடிக் கடி உயர்த்தப்படுகிறது. இதனால் வியாபாரிகள் பாதிப்படைவதை தடுக்க வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். சாலையோர வணிகர்க ளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். ஜிஎஸ்டியால் வணிகர் கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள் ளனர். நாடு முழுவதும் பாஜக எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனால் வகுப்பு வாத மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள் ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சீமான், சிறுபான்மையினரை “சாத்தானின் பிள்ளைகள்” என்று பேசியுள்ளார். அவர் ஆர்எஸ்எஸ், பாஜக பேச்சாளராக மாறியுள்ளார். வெறுப்பு உணர்வை தூண்டும் வகை யில் பேசிய சீமான் உடனடியாக மன் னிப்பு கேட்க வேண்டும். பழங்குடியி னரான குடியரசு தலைவர், மணிப்பூ ரில் நடக்கும் வன்முறை குறித்து எது வும் பேசவில்லை. அண்ணாமலை லட்சக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் தேடிக் கொள்கிறார். அவ ரது நடைபயணம் நீரிழிவு, கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவும். தமிழக மக்கள் யாருக்கு ஓட்டு  போட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். பாஜக ஆட்சியில் பொருளாதார சீர்கேடு ஏற் பட்டுள்ளது. வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். உதகையில் ஆர்எஸ்எஸ் முகாம் நடத்தப்பட்டதால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இனி  வரும் காலங்களில் கல்வி நிறுவனங் களில் இத்தகைய கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது, என்றார்.