பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி
நாமக்கல், ஏப்.11- நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 முதல் 18 வயது உடைய அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்து, பள்ளி கல்வியை முடிக்க செய்ய வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப் பட்டு உள்ளது. இதையொட்டி 6 முதல் 18 வயதுடைய இடை நின்ற, பள்ளி செல்லா குழந்தைகளை (இடம் பெயர்ந்த தொழி லாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிவதற்கு சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த பணி ஏப்ரல் முதல் 2 வாரங்களிலும், மே இறுதி வாரத்திலும் நடைபெறுகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களி லும், எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இக்கணக்கெ டுப்பு பணியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், கிராமப் புற செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி தன்னார்வ லர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் ஒன்றியத்தில் பள்ளி செல்லா, இடைநிற்றல் குழந்தைகளை கண்டறியும் பணி, நகராட்சிக்குட்பட்ட நரிக் குறவர் காலனியில் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு, குழந்தைகள் பள்ளிக்கு செல்வதன் அவசியம், அரசின் திட்டங்கள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், பெரியப்பட்டி பள்ளி தலைமையாசிரியர் பத்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்டுயானையால் வாழை தோட்டம் சேதம்
காட்டுயானையால் வாழை தோட்டம் சேதம் உதகை, ஏப்.11- கூடலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து, வாழைகளை காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் நட்டம் ஏற்பட் டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பசுந்தீவனத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் வரு கிறது. இந்நிலையில், கூடலூர் அருகே உள்ள பாடந்துரை மூச்சிகண்டி பகுதியில் காட்டு யானை வந்தது. தொடர்ந்து அதேபகுதியைச் சேர்ந்த அனிஷ் என்பவரது தோட்டத்துக் குள் நுழைந்து, அங்கு பயிரிட்டு பராமரித்து வந்த வாழை களை தின்றது. இதில் சில வாரங்களில் அறுவடைக்கு தயா ராக உள்ள 50க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமானது. தொடர்ந்து பல விவசாயிகளின் பயிர்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் மிகுந்த நட்டத்திற்கு ஆளாகி வரு வதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வனப்பகுதி யில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்ப தில்லை. தற்போது கோடை காலமாக உள்ளதால் உணவு தேடி தினமும் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப் படுத்தி வருகிறது. வனத்துறையினர் காட்டு யானையை விரட்டினாலும் சில மணி நேரத்தில் மீண்டும் ஊருக்குள் வரு கிறது. இதனால் விவசாய பயிர்களை பாதுகாக்க முடியா மல் உள்ளது. தொடர் நட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ் நிலை நிலவுகிறது. சில வாரங்களில் அறுவடை செய்ய தயாரான வாழைகளை காட்டு யானை நாசம் செய்து விட்டது. எனவே, சேதமடைந்த பயிர்களுக்கு வனத்துறை யினர் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும், என்ற னர்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண கோரிக்கை
குப்பைகள் நிறைந்து காணப்படும் உதகை தாவரவியல் பூங்கா
உதகை, ஏப்.11- நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தொடர்ந்து 20 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடு பட்டு வருவதால், பூங்காவில் உள்ள மலர் செடிகள் பராமரிப்பு, தூய்மை பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு குப்பை மேடாக பூங்கா காட்சியளிக் கின்றது. எனவே, தொழிலாளர்களின் கோரிக்கைளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறைக்கு சொந்த மான பூங்கா மற்றும் அரசு பண்ணை களில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லும் வகையில் பூங்காக்களை தயார் படுத்தும் பணியில் நிரந்தர மற் றும் தற்காலிக பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் தினக் கூலியாக 400 ரூபாய் மட்டுமே பெற்று வருகின்றனர். இந்நிலையில், 480 நாட் கள் முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிறப்பு காலவரை தொகுப்பு ஊதியத்தை வழங்க வேண் டும். அரசாணைபடி அறிவித்த நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் அடிப்படை யில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலைத்துறை பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் தாவரவியல் பூங்காவில் 20 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 20 நாட்களாக பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத் தில் ஈடுபட்டு வருவதால், பூங்கா பரா மரிப்பு, தூய்மை பணிகள் முற்றிலு மாக பாதிக்கப்பட்டு உள்ளது. இத னால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் பயன்படுத்திய உணவு பொருட்களின் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் புல் தரைகள் மற்றும் மலர் செடிகளில் வீசி செல்கின்றனர். இதனால், பூங்கா குப்பை மேடாக காட்சியளிக்கின்றது. எனவே, தொழிலாளர்களின் கோரிக் கைகளுக்கு அரசு விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சுற் றுலா பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல், ஏப்.11- மோகனூரில் நடைபெற்ற ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதி யில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ள டங்கிய கல்வி திட்டத்தின் கீழ் மோகனூர் வட்டார வள மையத்தில் ஆட்டிசம் தின விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பயிற்றுநர் உமாதேவி வரவேற்றார். மோக னூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ராதிகா, ஆசிரி யர் பயிற்றுநர்கள் தமிழரசி, விஜயா, பிரேம லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பயிற்றுநர் ஆனந்தகுமார் ஆட்டிசம் குழந்தைகள் பற்றி பெற்றோர்களுக்கு விளக்கி கூறினார். தொடர்ந்து `தி கிட் சிறார்’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. சிறப்பு பயிற்றுநர்கள் மீனா, செல்வராணி, செந்தமிழ் செல்வி ஆகியோர் பெற்றோர்களுக்கு விளக்கி கூறினர். இதில் இயன்முறை மருத்து வர் பாரதி, பள்ளி ஆயத்த முகாம் பணியா ளர் உஷாராணி, மணிமேகலை, பெற்றோர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுபோதையில் தாக்குதல்: ஒருவர் கைது
மதுபோதையில் தாக்குதல்: ஒருவர் கைது திருப்பூர், ஏப்.11- திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள ராயர்பாளை யத்தை சேர்ந்தவர் தினகரன். கடந்த வியாழனன்று தினகர னின் மனைவி வீட்டில் இல்லாததால், சந்தேகமடைந்து ராயர் பாளையம் பகுதியில் உள்ள விடுதிகளில் தேடி உள்ளார். இந் நிலையில், ராயர்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு மது போதையில் பிரஸ் (press) ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் சென்ற தினகரன் “என் மனைவி இந்த விடுதியில் உள்ளதாக தகவல் வந்துள்ளது. அனைத்து அறைகளையும் சோதனை செய்ய வேண்டும்” என விடுதி பொறுப்பாளரிடம் வாக்குவாத் தில் ஈடுபட்டுள்ளார். விடுதி காப்பாளர் தமிழரசி என்பவரும் அனைத்து அறைகளையும் திறந்து காட்டியுள்ளார். அப் போது, திருப்பூரை சேர்ந்த விஜயகுமார் மற்றும் கனகராஜ் ஆகியோர் மது போதையில் ஏன் ரகளை செய்கிறீர்கள்? என கேட்டதற்கு இருவர் மீதும் கல்லைக் கொண்டு தினகரன் சர மாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் காவல்துறையினர் தின கரனை தேடி வந்தனர். இந்நிலையில், செவ்வாயன்ற தினக ரனை ராயர்பாளையத்தில் வைத்து போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு நிறுத்தி, சிறையில் அடைத்தனர். இதற்கி டையே, மதுபோதையில் தினகரன் விடுதி பொறுப்பாளர் மற் றும் விஜயகுமார் கனகராஜ் ஆகியோரை தாக்கும் கண்கா ணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது.
கஞ்சா பறிமுதல்
சூலூர், ஏப்.11- கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார், சம் பவ இடமான சூலூர், தென் னம்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா வைத்திருந்த சோம னூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபதி (45) மற்றும் சுந்தராபுரம் பகு தியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (64) ஆகிய 2 நபர் களை கைது செய்து, அவர் களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் நான்கு சக்கர வாக னத்தை பறிமுதல் செய்தனர்.
விதி மீறி கடை: துணை மேயர் ஆய்வு
திருப்பூர், ஏப். 11- திருப்பூர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையத்தில், மாநக ராட்சியின் அனுமதி பெறாமல், கடைகளை இடித்து தனியாக அறை அமைத்துள்ளது குறித்து துணை மேயர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையமானது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 38 கோடியே 81 லட்சம் மதிப்பில் கடந்த ஆண்டு புது பொலிவு டன் கட்டப்பட்டது. தற்போது இந்த பேருந்து நிலையத்தில் கடைக்காரர்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைக ளின் வெளியிலேயே பொருட்களை வைத்தும், சில கடைக்கா ரர்கள் நடைபாதைகளில் கடைகள் அமைத்தும், கடைகளின் சுவர்களை இடித்து தனியாக ஒரு அறையும் அமைத்துள்ள தாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது. மேலும் இதுகு றித்து மாமன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி னர். இதை தொடர்ந்து மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிர மணியம் செவ்வாயன்று பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறைகளை மீறி பெரும்பா லான கடைகள் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிக ளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைத்திருந்த தும், அதேபோல் மாநகராட்சி நிர்வாகத்தின் எந்த ஒரு அனு மதியும் பெறாமல் கடைகளை இடித்து தனியாக ஒரு அறை அமைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாநக ராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் ஆலோசனை மேற் கொண்டு விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை மேயர் கூறினார்.
தலைவர் மீது புகார்: இன்று ஊராட்சி கூட்டம்
உடுமலை, ஏப். 11 – நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. போடிபட்டி ஊராட்சி மன்றத்தின் நிதி நிர் வாக செயல்பாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் அளவில் நிதி முறைகேடு நடைபெற்று இருப்ப தாக வார்டு உறுப்பனர்கள் புகார் தெரிவித்த னர். இதன்பேரில் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க போடிபட்டி ஊராட்சி மன்ற அலுவ கத்தில் 12 ஆம் தேதி புதன்கிழமை காலை விசாரணை கூட்டம் நடைபெறுகிறது. உடுமலை ஊராட்சி ஒன்றியம் போடிபட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் ஊராட்சிமன்ற தலைவர் அளவில் முறை கேடு நடைபெற்று உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் மீது 1994 தமிழ்நாடு ஊராட்சிகள் சட் டம் பிரிவு 205 உட்பிரிவு (1)(ஆ) வின் படி விளக் கம் கேட்டு குற்றச்சாட்டு அறிவிப்பு வெளியி டப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவ ரின் விளக்கம் முறையாக இல்லை என்பதால் சட்டப்பிரிவு 205 உட்பிரிவு 11 ன் படி ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்வதற் கான ஊராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர் களின் கருத்துக்களை பெற மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி ஊராட்சி மன்றக் கூட்டம் போடிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறுகிறது. நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க நடை பெறும் கூட்டம் என்பதால் இந்த ஊராட்சி ஒன் றியம் முழுவதும் அனைவரின் கவனமும் இன் றைய கூட்டத்தில் உள்ளது. போடிபட்டி ஊராட்சியின் தேர்தலில் அதி முக சார்பு வேட்பாளராக வெற்றி பெற்று பின் னர் பல ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலை யில் ஆட்சி மாற்றம் எற்பட்ட உடன் திமுக கட் சிக்கு மாறினார். மேலும் போடிபட்டி ஊராட்சி யில் வேலை செய்த ஊராட்சி செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டதாக சில மாதங்க ளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட் டார் என்பது குறிப்பிடதக்கது.
அரசு பெண் வழக்கறிஞர், மகள் வெட்டப்பட்ட வழக்கு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருப்பூர், ஏப். 11 - திருப்பூரில் அரசு பெண் வழக்கறி ஞர் மற்றும் அவரது மகளை அரி வாளால் வெட்டிய வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், பாதிக் கப்பட்டவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். திருப்பூர் வெள்ளியங்காடு பகு தியை சேர்ந்தவர் ஜமீலா பானு (40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் நிஷா (21). இவர் சேலம் அரசு சட்டக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி ஜமீலா பானு திருப்பூர் குமரன் ரோட்டில் தனி யார் வணிக வளாகத்தில் உள்ள தன்னுடைய வழக்கறிஞர் அலுவ லகத்தில் இருந்தார். அவருடன் மகள் நிஷாவும் அங்கு இருந்தார். அப் போது வாலிபர் ஒருவர் திடீரென ஜமீலாபானுவின் அலுவலகத்திற் குள் புகுந்து, ஜமீலா பானுவையும், அவரது மகள் நிஷாவையும் சர மாரியாக வெட்டினார். இதில் படுகா யம் அடைந்த இருவரும் தீவிர மருத் துவ சிகிச்சைக்குப் பின் மீண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீ சார் நடத்திய விசாரணையில் சேலத் தில் நிஷா படிக்கும் அரசு சட்டக் கல்லூரியில் ஏற்கனவே படித்த திருப் பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த ரகுமான் கான் (25) என்பவர் நிஷாவுக்கு காதல் தொல்லை கொடுத்து இடையூறு செய்து வந்த தாக தெரியவந்தது. இதையடுத்து சேலம் கொண்டா லம்பட்டி போலீஸ் நிலையத்தில் ரகு மான்கான் மீது நிஷா புகார் அளித் தார். புகாரின் பேரில் போலீசார் ரகு மான்கானை கைது செய்தனர். இந்த கொலை முயற்சி நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு ரகுமான்கான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆத்திரத்தில் இருந்த ரகுமான்கான் திருப்பூரில் அலுவலகத்தில் இருந்த நிஷா மற்றும் அவருடைய தாய் ஜமீ லாபானு ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, கேர ளாவில் பதுங்கி இருந்த அப்துல் ரஹ்மானை கைது செய்து திருப்பூ ருக்கு அழைத்து வந்து நீதிமன்ற காவ லில் வைத்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நி லையில் வழக்கு விசாரணை முடிந்து செவ்வாயன்று மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பு வழங்கினார். இதில், வழக்கறிஞர் ஜமீலா பானு மற்றும் அவரது மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததற்காக ரகுமான் கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்டவர்க ளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வும் நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.
கல்குவாரிகளில் தண்ணீர் எடுப்பதற்குத் தடை மீறினால் நடவடிக்கை எடுக்க முடிவு
திருப்பூர், ஏப்.11 - திருப்பூர் பல்லடம் வட்டாரத்தில் பழைய, புதிய கல்குவாரி குழிகளில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக லாரி களில் தண்ணீர் வெளியே எடுத்துச் செல்லக் கூடாது என்று வட்டாட்சியர் நடத்திய கூட்டத்தில் உறுதியளிக்கப் பட்டது. பல்லடம் வட்டத்திற்குட்பட்ட சுக்கம் பாளையம் கிராமம், மேற்கு ராசாகவுண் டன்பாளையத்தில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பழைய கல்குவாரி யில் இருந்து நீர் எடுத்து கோடாங்கிபா ளையத்தில் உள்ள தனியார் கல்குவாரி ஆலைகளுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இது தொடர் பாக விவசாயிகள் புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்காமல் அரசு அலுவலர் கள் காலம் தாழ்த்தினர். இந்நிலையில், விவசாயிகள் இரண்டு தண்ணீர் லாரிகளை கடந்த 7 ஆம் தேதி வெள்ளியன்று சிறை பிடித்த னர். மேலும் அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி னர். அதன் அடிப்படையில் பல்லடம் காவல் நிலையத்தில் அலுவலர்கள் வந்திருந்தனர். மேலும், வருவாய்த் துறை தரப்பில் சாமளாபுரம் வரு வாய் ஆய்வாளர் வந்திருந்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதா கவும், ஏற்கனவே அனுமதி முடிந்த பழைய குவாரியிலிருந்து தண்ணீர் எடுத்து விற்றுக் கொண்டிருந்த சர வணன் என்ற நபரிடம் சட்டவிரோதமாக தண்ணீர் விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்ததாகவும், அதை மீறி அவர் செயல்படுவதாகவும் அதிகா ரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சனை தொடர்பாக திங்க ளன்று கூட்டு குழு பேச்சுவார்த்தை பல்ல டம் தாசில்தார் தலைமையில் நடைபெற் றது. இதில் பல்லடம் வருவாய் வட்டாட் சியர், துணை வட்டாட்சியர், சாமளா புரம் வருவாய் ஆய்வாளர், சுக்காம்பா ளையம் கிராம நிர்வாக அலுவலர், மின் வாரிய பொறியாளர் உள்ளிட்ட அதிகாரி களும் கலந்து கொண்டனர். பாதிக்கப் பட்ட விவசாயிகள் மற்றும் சார்பு அமைப் பினர் கலந்து கொண்டனர். இதில் இயங்கி முடிந்த பழைய கல்குவாரி கள், இயங்கிக் கொண்டுள்ள கல்குவா ரிகள் என அனைத்து கல் குவாரிகளிலும் சட்டத்திற்கு விரோதமாக தண்ணீர் எடுப் பது தொடர்பாக அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்படும். கல் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தண்ணீர் எடுக்க வேண்டுமா னால் மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க முடியாது. சென்னையில் தான் உரிய அனுமதி சட்டபூர்வமாக பெற வேண் டும். தண்ணீரை எடுத்து விற்பனை செய் வதை முழுமையாக தடை செய்யப்பட் டுள்ளது. மீறி செயல்பட்டால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் மின்சார இணைப்புகளின், மின்சா ரத்தை துண்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கல்குவாரி களும் கம்பி வேலி இட்டு மூடப்படுவது உறுதி செய்யப்படும். இவ்வாறு உறு தியளிக்கப்பட்டது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:38.08/60அடி நீர்வரத்து:569கன அடி
வெளியேற்றம்:1124கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:54.66/90அடி
நீர்வரத்து:34கனஅடி
வெளியேற்றம்:கன அடி
ரூ.5 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, ஏப்.11 - சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்களன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.5 லட்சத்திற்கு நிலக்கடலை விற்ப னையானது. இதில், முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7, 500 முதல் ரூ 7,600 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,750 முதல் ரூ.7,500 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ. 6,750 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. மேலும், சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அரசு ஆதார கொள்முதல் திட்டதின்கீழ் தேங்காய் கொப்பரை கொள்முதலுக்கான விவசாயிகள் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருவதால், சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல், புகைப்படம் 2 ஆகியவற்றை ஒப் படைத்து பதிவு செய்யுமாறு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தந்தையை கொலை செய்த மகன் கைது
கோவை, ஏப்.11- பொள்ளாச்சி அருகே தந்தையை அடித்து கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - ஊத்துக்காடு சாலை, காமராஜர் வீதியை சேர்ந்தவர் நடராஜன் (73). இவர் அவரது மனைவியுடன் வசித்து வந்தார். இவர்க ளுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், மூன்றாவது மகனான செந்தில் (40), குடும்பத்தை பிரிந்து தற்போது தந்தையுடன் வசித்து வருகிறார். செந்திலுக்கு மது அருந் தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், ஞாயி றன்று இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த செந்தில், தந்தை நடராஜுடன் தகராறு செய்து அவரை தாக்கிய தாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த நடராஜ் திங்க ளன்று அதிகாலை உயிரிழந்தார். இதன்பின் உறவினர் களை அழைத்து இயற்கை மரணம் எனக்கூறி உடலை அடக்கம் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் இறந்த நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மது போதையில் நடராஜை தாக்கி கீழே தள்ளி விட்டதால் அவர் உயிரி ழந்தது தெரியவந்தது. இதனையடுத்து செந்தில் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவ லுக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி பசு பலி
உதகை, ஏப்.11- பந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரி ழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, எருமாடு அருகே உள்ள இண்கோ நகர பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் 2 வயதுடைய பசுமாட்டை புல்வெளிக்கு மேய்க்க சென்றுவிட்டு மீண்டும் வீட்டைநோக்கி நடை பாதையில் நடந்து சென்றுள்ளார். பசுமாடு முன்னால் சென்ற போது, நடைபாதையில் அறுந்து கிடந்த மின்கம் பியை மிதித்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பசு மாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல றிந்ததும் சேரம்பாடி உதவி செயற்பொறியாளர் முத்து குமார், வருவாய் ஆய்வாளர் விஜயன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் யுவ ராஜ் மற்றும் மின்வாரிய துறையினரும் விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்தனர். அதன்பிறகு பசுமாட்டின் உடல் மீட்கப்பட்டது. மேலும், மின்வாரியதுறை மூலம் பசுமாட்டை இழந்தவருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று மின்வாரிய துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் கேன்கள் வாங்குபவரா நீங்கள்? உணவு பாதுகாப்புத்துறை அறிவுரை
சேலம், ஏப்.11- கோடைகாலம் தொடங்கி உள்ள நிலை யில் குடிநீர் கேன்கள் வாங்கும்போது, கலப் படம், போலி வாட்டர் பாட்டில்களை கூர்ந்து கவனத்து வாங்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் அடைத்து வைக்கப் பட்டிருந்த குடிநீர் தயாரிப்பாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடைபெற் றது. மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து குடிநீர் தயா ரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதனி டையே, குடிநீர் தயாரிப்பு ஆலையை அதி காரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். முறையான விதிமுறைகளை பின்பற்றி குடி நீர் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர், கூறுகை யில், சேலம் மாவட்டத்தில் பாட்டில் அடைத்து வைக்கப்படும் 47 குடிநீர் நிறுவனங்கள் உள் ளது. அதன் உரிமையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிறு வனங்கள் இயங்கியதா? என்று குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நிறு வனம் எவ்வாறு செயல்பட வேண்டும், குடிநீர் பாட்டிலில் தண்ணீர் எவ்வாறு நிரப்ப வேண் டும் உள்ளிட்ட வழிமுறைகள் அறிவுறுத்தப் பட்டு வருகிறது. தயாரிப்பு நிறுவனத்திடம் விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப் பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்கா விட்டால் உரிமைத்தை ரத்து செய்யும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து எச்ச ரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து குடிநீர் பாட்டி லில் தயாரிப்புத் தேதி குறிப்பிடப்படுவ தில்லை, கேன்களில் அசுத்தம் இருப்பது, ஒரு நிறுவனத்தின் பெயர் குறிப்பிட்டு விட்டு மற்றொரு நிறுவனத்தில் தண்ணீர் நிரப்புவது, பழைய தண்ணீர் கேன்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட புகார்கள் வந்து கொண்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. பொதுவாக தண்ணீர் பாட்டில்களில் கிரு மிகள் இல்லாமல் தான் இருக்கும், கிருமிகள் இருக்கும் பட்சத்தில் வயிற்றுப்போக்கு உள் ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. அது போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்ப தற்காகத்தான் விழிப்புணர்வு கூட்டம் ஏற்ப டுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் வாங்கும் போது உணவு பாதுகாப்பு உரிமம் இருக்கிறதா? என் பதை பார்த்து வாங்க வேண்டும், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் பிஎஸ் எண்கள், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி உள் ளிட்டவைகள் மக்கள் பார்த்து வாங்க வேண் டும் இதைபார்த்து வாங்கினால் கலப்படம், போலி வாட்டர் பாட்டில்களில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
ஜிபே-யில் தவறுதலாக அனுப்பிய பணம் போலீசார் முன்னிலையில் ஒப்படைத்த இளைஞர்
பள்ளிபாளையம், ஏப்.11- விசாகப்பட்டினத்தில் இருந்து நாமக் கல்லைச் சேர்ந்த இளைஞருக்கு தவறு தலாக ஜிபேயில் அனுப்பிய பணத்தை போலீசார் முன்னிலையில் சம்பந்தப் பட்டவருக்கு ஒப்படைத்த இளைஞரின் நடவடிக்கை அனைவராலும் பாராட்டப் பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் (32). இவர், ஈரோட்டில் உள்ள தனியார் சைசிங் மில் லில் மேலாளராக பணிபுரிந்து வருகி றார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் நான் காம் தேதி இவருக்கு அடையாளம் தெரி யாத எண்ணில் இருந்து ஜிபே அக்க வுண்டிற்கு, ரூ31,320 பணம் வந்துள்ளது. இதனை பெருமாள் கவனிக்கவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு மதுரை வடக்கு பகுதியில் வசிக்கும் வெங்கடே சன் என்பவர், பெருமாளை செல்போ னில் அழைத்து, தான் மதுரையில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவ தாகவும், விசாகப்பட்டினத்தில் உள்ள தனது தொண்டு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டிய பணத்தை தவறு தலாக இந்த எண்ணிற்கு பணத்தை அனுப்பிவிட்டதாக கூறி பணத்தை மீண் டும் அனுப்புமாறு கேட்டுள்ளார்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையில், ஏமாந்து பணத்தை அனுப்பிவிட்டோம், திரும்ப அளியுங்கள் என பணத்தை திருப்பி அனுப்ப கேட்டு, ஒட்டுமொத்த மாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் போக்கு அதிகரித்துள்ளதால் பெருமாள் பணத்தை அனுப்புவதற்கு தயக்கம் காட்டியுள்ளார். இருப்பினும், பள்ளிபாளையம் காவல் நிலையத் திற்கு வந்தால் தருகிறேன் எனக் கூறி யுள்ளார். மேலும், பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு சென்று பெரு மாள் விபரங்களை தெரிவித்துள்ளார். இதனை கேட்ட காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வங்கி பரிவர்த்தனை கணக்கு விவரங்களையும் பார்த்தபோது தவறு தலாக பணம் அனுப்பப்பட்டதை போலீ சார் உறுதி செய்தனர். இதையடுத்து, மதுரையில் இருந்த வெங்கடேசனை பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் வரவழைத்தனர். பின்னர், பெருமாள், 31,320 ரூபாயை முழுமையாக சம்பந்தப் பட்டவரிடம் ஒப்படைத்தார். பணத்தை நேர்மையாக வழங்கிய பெருமாளுக்கு போலீசார் பாராட்டுகளையும், தவறு தலாக பணத்தை அனுப்பிய வெங்கடே சனுக்கு அறிவுரைகளையும் வழங்கி னர்.
கடந்த 10 நாட்களில் 12 போலி மருத்துவர்கள் கைது
சேலம், ஏப்.11- கடந்த 10 நாட்களில் 12 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். எனவே, மருத்துவம் படிக் காமல் வைத்தியம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் சரகத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் ஏதா வது ஒரு மருத்துவரிடம் உதவியாள ராக பணிபுரிந்துள்ளனர். பின்னர், அனு பவ அடிப்படையில் சிலர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத் தரவிடப்பட்டது. அதன்படி போலி மருத்துவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின் றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் சேலம் மாவட்டத்தில் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் மருத் துவ தொழிலில் ஈடுபட்டு வந்த சங்க கிரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், தேவராஜன், ஓமலூரை சேர்ந்த மணி கண்டன், வாசுதேவன்,
ஆன்ட்ரோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள னர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட் டத்தில் 5 பேரும், தருமபுரி மாவட்டத் தில் 2 பேரும் கைதாகினர். சேலம் சரகத்தில் மொத்தம் 12 போலி மருத் துவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். சேலம் சரகத்தில் மருத்துவம் படிக்காமல் முறையற்ற வைத்தியம் பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும், என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண் கைது சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த ஆவணியூர் புறவழிச்சாலை யில் மாணிக்கம் என்பவர் தள்ளியம் மாள் மருந்தகம் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வருகிறார். இந்த மருந்தகத்தில் மருத்துவம் படிக்காமல் இளம் பெண் பொதுமக்களுக்கு ஊசி செலுத்து வது மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எடப்பாடி அரசு மருத்துவமனை மருத் துவர் சுதாகர், காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன்பேரில், மருந்த கத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, டிஃபார்ம் படித்து விட்டு கவிபிரியா என்ற இளம் பெண் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து அவரிடம் இருந்த மருந்துகள் மற்றும் ஊசிகளை பறி முதல் செய்து அவரை எடப்பாடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இவர் மருத் துவம் பார்த்ததில் எவருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கோணத் திலும் விசாரணையை தொடங்கி யுள்ளனர். மருத்துவம் படிக்காமல் இளம் பெண் மருத்துவம் பார்த்து கைது செய்யப்பட்ட சம்பவம் எடப் பாடி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ரூ.8 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, ஏப்.11- தருமபுரியில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடு களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்கா டிக்கு திங்களன்று ஒரு டன் 794 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்ச மாக ரூ.565க்கும், குறைந்த பட்சமாக ரூ.380க்கும், சரா சரியாக ரூ.488.83க்கும் விற் னையானது. மொத்தம் ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 127 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற் பனை செய்யப்பட்டது.