districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்கக்கோரி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ.12- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு அனைத்து சத் துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தமிழகம் தழுவிய ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும். உயிரி ழந்த ஊழியரின் வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை ஈடு செய்ய அகவிலைப்படி வழங்க வேண்டும். பணிக்காலத்தில் அனுமதிக்கப் பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தை ஓய்வுக்கு பின்னும் அனுமதிக்க வேண்டும்.  குடும்ப நல நிதி அனும திக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி  ஓய்வூதியர் சங்கம் சார்பில், தமிழ கம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் செவ்வாயன்று கோரிக்கை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.என்.இராமசாமி தலைமை வகித்தார். இதில், சத் துணவு ஓய்வூதியர் சங்கத்தின் மாநி லத் தலைவர் கே.பழனிசாமி, மாவட் டச் செயலாளர் ஆர்.இராஜகோ பால், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. அருணகிரி, மாவட்ட மகளிர் நிர் வாகி கே.ஜானகி, மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.நாயகம் உள் ளிட்டோர் உரையாற்றினர். முடி வில், மாவட்டப் பொருளாளர் எஸ். சாரதாமணி நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத் துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட கன்வீனர் சி. அங்கம்மாள் தலைமையில் தர்ணா  போராட்டம் நடைபெற்றது. சிஐடியு  மாவட்டச் செயலாளர் பி.ஜீவா துவக்கவுரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் சி.காவேரி, நிர்வா கிகள் சி.கருணாநிதி, சி.பாபு, இளவ ரசி, ஆர்.மல்லிகா ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, சத்து ணவு ஊழியர் சங்க மாநிலச் செயலா ளர் பி.மகேஸ்வரி, ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி ஆகியோர் வாழ்த் திப் பேசினர். அரசு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் எம்.சுருளிநா தன் நிறைவுரையாற்றினார்.