districts

img

சேலம்: தனியார் ஜவ்வரிசி ஆலையில் ஆய்வு

சேலம், மார்ச் 8- சேலத்தில் உள்ள தனியார் ஜவ்வரிசி ஆலையில், தமிழக சட்டப்பேரவை பொதுத் துறை நிறுவனங்கள் குழுவினர் செவ்வா யன்று ஆய்வு மேற்கொண்டனர். தமிழக சட்டப்பேரவை பொதுத்துறை நிறுவனங்கள் குழுவினர் சேலம் மாவட் டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அதில், செவ்வாயன்று செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தனி யார் ஜவ்வரிசி ஆலை ஒன்றில் இக்குழு வினர் ஆய்வு மேற்கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, சேகர், தளபதி, நிவேதா, பாலாஜி, மனோ கரன், ஜெயக்குமார் ஆகியோர் ஆலையில் எவ்வாறு ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படு கிறது? உணவின் தரம், ஆலையின் கழிவுநீர் வெளியேற்றம் குறித்து பார்வையிட்டனர்.  இதைத்தொடர்ந்து சேகோசர்வ் உரி மையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பொதுத் துறை நிறுவனங்கள் குழு தலைவர் ஆலோ சனை மேற்கொண்டார். இதில், சேகோ சர்வ் உரிமையாளர்கள், தொழிலை மேம் படுத்த அரசு உதவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதைய டுத்து இதுதொடர்பான விரிவான அறிக்கை  அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஆய்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், மேட்டூர்  சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனி ருந்தனர்.