ஈரோடு, டிச. 30- தகுதிவாய்ந்த சாலைப்பணியாளர்களுக்கு ஆய் வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கோபி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சார்நிலை பணியமைப்பு விதிகள் அடிப் படையில் தகுதிவாய்ந்த சாலைப்பணியாளர்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு, அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களில் பணி மாற்றம் வழங்க வேண்டும். நம்பியூர் உட்கோட்டத்தில் மாநகர ஈட்டுப்படி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிக்கு கருவிகள், தளவா டங்கள், காலனி, மழை கோட்டு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். சென்னை மழைக்கால பணிகளுக்கு சென்றவர்களுக்கு பயணப்படி மற்றும் உணவுப் படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, கோட்ட தலைவர் என்.முருக வேல் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.கதிரவன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ்.செந்தில் நாதன் துவக்கவுரையாற்றினார். கோரிக்கையை விளக்கி கோட்ட செயலாளர் ரா.கருப்புச்சாமி பேசினார். மாநில தலைவர் மா.பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். கோட்ட பொருளாளர் எஸ்.ஜெபமாலைராஜ் நன்றி கூறினார்.