districts

img

15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

கோவை, மே 30- ஆனைமலையடுத்த சேத்துமடையில், விவசாயி ஒரு வரின் தோட்டத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதனை லாவகமாக மீட்டு அடர்ந்து வனப்பகுதியில் விடுபட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சேத்து மடை பகுதியில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான தோட் டம் உள்ளது.  இவர் தனது அன்றாட பணிகளை தோட்டத்தில் செய்து கொண்டிருந்தபோது, அருகே இருந்த புதருக்குள் விநோதமான சத்தம் கேட்டுள்ளது.  இதனையடுத்து அங்கு  சென்று பார்த்த போது அங்கு 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.  இதனைத்தொடர்ந்து வனத்துறையினர், பாம்பு பிடிக் கும் வைல்ட் ஹபிடேட் கன்சர்வேஷன் டிரஸ்ட்  என்கிற வல்லு நர் குழுவை வரவழைத்தனர். பின்னர், புதருக்குள் மறைந்தி ருந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. பின்பு  மீட்கப்பட்ட பாம்பு பத்திரமாக  டாப்சிலிப் அடர்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டது.