districts

img

“ஏக்கருக்கு ரூ.2 லட்சம் செலவு செய்து பயிரிட்டுள்ளோம்”

பள்ளிபாளையம், டிச.27- பொங்கல் தொகுப்பில் கரும்பை இணைக்குமாறு, பள்ளிபாளையம் விவ சாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அடுத்துள்ள சமய சங்கிலி பகுதி யில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட்டுள் ளது. இந்நிலையில் தமிழக அரசு, பொங் கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரி சாக ரூ.1000 மற்றும் பச்சரிசி வழங்கப் படும் என அறிவித்தது. இதில், கரும்பை சேர்க்கவில்லை. இதனால், சமய சங் கிலி பகுதி கரும்பு விவசாயிகள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.  இது குறித்து சமய சங்கிலி கரும்பு விவசாயிகள் கூறுகையில், கடந் தாண்டை போலவே, இந்த தைப்பொங் கலுக்கு தமிழக அரசு கரும்பை கொள் முதல் செய்யும் என நினைத்து, ஏராள மான விவசாயிகள் பொங்கல் கரும்பு களை பயிரிருட்டுள்ளனர். ஏக்கருக்கு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். தற் போது கரும்புகள் அறுவடைக்கு தயா ராக உள்ளது. பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லை என தமிழக அர சின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள் ளோம். எனவே, தமிழக அரசு மறு பரிசீ லனை செய்து, பொங்கல் பரிசு தொகுப் பில் கரும்பை இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.