வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, மார்க்சிஸ்ட் கட்சியின் கேரளா கிளப் கட்சிகிளை மற்றும் கணபதி கட்டபொம்மன் தெரு கிளை, ஹோட்டல் அண்ட் பேக்கரி தொழிலாளர் சங்க கிளை, மலையாள பண்பாட்டு மேடை, கேடிசி கிளைகளின் சார்பில், திங்க ளன்று சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபனிடம் ரூ.94 ஆயிரத்து 200 ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.