districts

img

பிரசத்தின்போது இறந்த நிலையில் பிறந்த குழந்தை

நாமக்கல், பிப்.4- குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் ஒருவருக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது எனக்கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், சுந்தரம் காலனியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மனைவி துர்கா (23). நிறைமாத கர்ப்பிணியான துர்கா பிரசவத்திற்காக குமாரபாளைம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றேடுத்தார். ஆனால், குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மேலும், பிரவசத்தின் போது துர்காவுக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இந்நிலையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கூறி, வியாழனன்று செல்லமுத்துவின் உறவினர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில், எழுத்து மூலம் புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.