districts

img

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ.11- பால் கொள்முதல் விலையை ரூ. 10 உயர்த்தி  வழங்கிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பேரூர் பச்சாபாளை யம் ஆவின் தலைமை அலுவ லகம் முன்பு தமிழ்நாடு பால்  உற்பத்தியாளர்கள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பால் கொள்முதல் விலையை ரூ. 10  உயர்த்தி வழங்கிட வேண்டும். கால்நடை  கலப்பு தீவனங்களை மானிய விலையில்  வழங்கிட வேண்டும். பால் உற்பத்தியாளர்க ளுக்கு வழங்கும் ஊக்கத்தொகை லிட்ட ருக்கு ரூ.5 உயர்த்தி வழங்க வேண்டும்.  ஆவின் பால் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும். ஆவின் ஊழியர்களின் பணி நிரந்த ரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  கோவை மாவட்டம், பேரூர் பச்சாபாளை யம் ஆவின் தலைமை அலுவலகம் முன்பு  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தி னர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு, கே.தங்க வேல் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டத் தலைவர் வி.பி இளங்கோவன், மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிசாமி மற்றும் நிர் வாகிகள் என்.ஆறுச்சாமி, ஒன்றியச் செயலா ளர் எ.காளப்பன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர். இதில், ஸ்டாலின் பழனிசாமி, ரவீந்திரன் உள்ளிட்ட திரளான விவசாயிகள் பங்கேற்றனர். ஆர்ப் பாட்டத்தின் முடிவில் ஆவின் மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.