நாமக்கல், நவ.1- நிலமற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குமாறு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங் கத்தின் பள்ளிபாளையம் ஒன்றியம் வடக்கு பகுதி 5ஆவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் பள்ளிபாளையம் ஒன்றியம் வடக்கு பகுதி 5 ஆவது மாநாடு வெப்படை வி.பி.சிந்தன் நினைவகத்தில் வி.சண்முகம் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.சி.துரை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் வி.பி. சபாபதி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் தங்கராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செந்தாரர்பாளையத்தில் பல ஆண்டுகள் சாகுபடி செய்து வரும் நிலத்தை, ஆக்கிரமிப்பு என அரசு அதிகாரிகள் தவறாக கூறி வருகி றார்கள். மேலும், குமாரபாளையம் வட்டாட்சியர் நீதிமன்ற உத்தரவை அவமதித்து விவசாயிகளை வெளி யேற்றி வருகிறார். எனவே அந்த நிலத்தில் தொடர்ந்து சாகுபடி செய்ய அனுமதிக்க வேண்டும். சொந்த நிலமற்றவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு மனை பட்டா வழங்கி சொந்த மாக்கப்பட வேண்டும். தற்போது நிறுத்தப்பட்டு வரும் முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும். குமாரபாளையம் தாலுகாவில் வாட்டாட்சியர் அலுவ லகம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மாநாட்டில், தலைவராக வி. சண்முகம், செயலாளராக ஆர்.குரு சாமி, பொருளாளராக ஆர்.கோவிந்தசாமி உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்த லிங்கம் சிறப்புரையாற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர் ப.குமார் நன்றி கூறினார்.