சேலம், பிப்.13- சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகளை கணக்கெ டுத்து அடையாள அட்டை வியாபார சான்றி தழ்களை வழங்கி முறையாக சாலையோர வியாபாரிகளின் சங்கங்களின் ஆலோசனை களோடு தேர்தல் நடத்தி வெண்டிங் கமிட்டி அமைக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு சாலையோர பாதுகாப்பு மற்றும் முறைப் படுத்துதல் சட்டத்தின் படி அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங் கத்தின் மாவட்ட தலைவர் பி. விஜயலட்சுமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதயகுமார், செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்ட உதவி தலைவர் ஆர்.வெங்கடபதி, சாலையோர விற்பனையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பி.தனசேகர் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதில், ஏராளமா னோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
கோவை
இதேகோரிக்கைகளை முன்வைத்து, சிஐ டியு கோவை மாவட்ட சாலையோர வியா பாரிகள் சங்கதினர் கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். இதில், சங்கத் தின் நிர்வாகிகள், பி.ராமு, ரத்தினகுமார், பைரஸ் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.