தாராபுரம், மார்ச் 7 - அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திடவும், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தாராபுரத்தில் பிரச் சார இயக்கம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியூ சார்பில் மார்ச் 14 தேதி 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோரிக்கை மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதுகு றித்து பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திடவும், 10 அம்ச கோரிக்கைகள் குறித்து பிரச்சார இயக்கம் தாராபு ரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தாலூகா செயலாளர் என்.கனகராஜ், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க கிளை தலைவர் எம்.அப்துல் ஜப்பார், செயலாளர் சத்தீஸ்வரன், மண்டல துணைத்தலை வர் டி.ராமசாமி, ஓய்வு பெற்றோர் சங்கத்தின் நிர்வாகிகள் முத் துச்சாமி, பொன்னுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.