உதகை, ஜன.1- நீலகிரியில் விளையும் பசுந்தே யிலைக்கு டிசம்பர் மாதத்துக்கான குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.17.76க்கு விலை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியார் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டு றவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் மாதம் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சரா சரி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.17.76க்கு விலை நிர்ணயம் செய்துள் ளது. டிசம்பர் மாதம் உற்பத்தி செய்யப் பட்ட தேயிலையின் ஏல விற்பனையின் அடிப்படையில் இந்த விலையை தேயிலை தொழிற்சாலைகள் விவசாயி களுக்கு உரிய முறையில் வழங்க வேண் டும். தேயிலை வாரியத்தால் அமைக் கப்பட்டுள்ள குழு இதனை கண்காணிக் கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவே அதிகபட்ச விலை என கூறப்படுகிறது.