நாமக்கல், ஏப்.27- கோடை வெயிலை பயன்ப டுத்தி, குடிநீர் கேன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. தொடர்ந்து மே மாதத்தில் வெயில் இன்னும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடுமையாக கொளுத்தும் வெயி லின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை வெப் பத்தின் காரணமாக குடிநீரின் தேவையும் அதிகரித்துள்ளது. பள் ளிபாளையத்தில் மேம்பால பணி கள் மற்றும் சாலை விரிவாக்க பணி கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலையில் பள்ளம் தோண்டும்போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இத னால், பல்வேறு பகுதிகளில் முறை யான குடிநீர் வழங்க முடியாத நிலை அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. மேலும் காவிரி ஆற்றில் கலக்கப்ப டும் சாயக்கழிவு நீர் காரணமாகவும், குடிநீர் மாசடைந்து வருவதால் பொதுமக்கள் துணி துவைக்கவும், குளிக்கவும் மட்டுமே காவிரி ஆற்று நீரை பயன்படுத்தி வருகின் றனர். மேலும், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து உள்ள நிலை யில், மின் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சினாலும், குறைவான அள விலயே நீர் வருகிறது. இதன் கார ணமாக பொதுமக்கள் காசு கொடுத்து குடிநீர் கேன்களை வாங் குகின்றனர். இந்நிலையில், குடிநீர் தேவை அதிகரிப்பால் குடிநீர் கேன் கள் விலையும் கணிசமாக உயர்த்தி யுள்ளனர். இதுகுறித்து குடிநீர் கேன் விற் பனை செய்யும் குமரேசன் என்பவர் கூறியதாவது, வருடம் முழுவதும் குடிநீர் கேன்களை மட்டுமே வாங்கி பயன்படுத்தும் குடும்பங்கள் ஏரா ளமானோர். அவர்கள் சராசரியாக தேவையைப் பொறுத்து ஒரு மாதத்திற்கு 8 முதல் 10 குடிநீர் கேன்கள் வரை வாங்குவார்கள். ஆனால் தற்போது கொளுத்தும் கோடை வெயில் காரணமாகவும் தேவையான குடிநீர் கிடைக்காத தால் தற்போது எங்களிடம் கூடுத லாக குடிநீர் கேன்களை வாங்கு கின்றனர். ஆரம்பத்தில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டு வந்த 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்கள். தற் போது தேவை அதிகரிப்பு காரண மாக 30 முதல் 35 ரூபாய் வரை கூடு தல் விலை வைத்து விற்கப்படுகி றது. எங்களுக்கு வழங்கும் நிறுவ னமும் சற்று கூடுதலாக குடிநீர் கேன் களுக்கு விலையை ஏற்றியதால் நாங்களும் விலையை ஏற்ற வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் முழுவதுமே இந்த விலை ஏற்றம் இருக்கும். மேலும் திருச்செங்கோடு, நாமக்கல், மோக னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களி லும் கூடுதல் விலைக்கு குடிநீர் கேன் கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார். பின்பு இவ்வளவு பெரிய காவிரி ஆறு அருகில் இருந் துமே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு காசு கொடுத்து பொதுமக்கள் குடி நீர் கேன்களை வாங்குகிறார்கள் என்றார். நாமக்கல் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இயங்கும் பேக்க ரிகளிலும் குடிநீரின் தேவை அதிக ரிப்பால், சராசரியாக ஒரு நாளைக்கு 10 முதல் 15 கேன் குடிநீர் வரை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது தேவை அதிக ரிப்பால் 15 முதல் 22 கேன்கள் வரை தினந்தோறும் தேவைப்படுவதாக பேக்கரி கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். குடிநீர் கேன்களின் விலையை நிறுவனங்கள் தன்னிச்சையாக நிர் ணயித்து வருகின்றது. எந்த வித கட் டுப்பாடுமின்றி, மக்களின் தேவை அதிகரிப்பதை கணக்கில் கொண்டு இத்தகைய விலை உயர்வை மேற்கொள்கின்றனர். எவராலும் உற்பத்தி செய்ய முடியாத, இயற்கை கொடுக்கும் நீரை லாப நோக்கத்தோடு இதுபோன்ற நிறு வனங்கள் செயல்படுகிறது. இது போன்ற தருணங்களில் தமிழக அரசு தலையிட்டு குடி நீர் கேன்க ளின் விலையை கண்காணித்து கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என சமூக செயற்பாட்டா ளர்கள் வலியுறுத்துகின்றனர்.