districts

img

தெக்கலூரில் விசைத்தறியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஜன.31- ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப் புக்கொண்ட கூலி உயர்வை உடனடி யாக வழங்க கோரி, தெக்கலூரில்  விசைத்தறி உரிமையாளர்கள் திங் களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  கோவை, திருப்பூர் மாவட்டங்க ளில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு அறி வித்த கூலி உயர்வை அமுல்படுத்த  கோரியும், 2லட்சம் விசைத்தறியா ளர்களின் குடும்ப வாழ்வாதாரம் காக்க கோரியும்,  கடந்த 8 ஆண்டுக ளாக கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண் டித்தும் பல நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இப்போராட்டத் திற்கு ஆதரவாக விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  இந்நிலையில், அவிநாசி தெக்க லூரில் திங்களன்று நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, தமிழக முதல்வர் விசைத்தறி உரிமையாளர் களின் குடும்பங்களை காக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதில், விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகி முத்துசாமி, பொன்னுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், மீண்டும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு  எட்டாத பட்சத்தில் வீடுகள் தோறும்  கருப்புக்கொடி கட்டி போராட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.