districts

img

கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி விசைத்தறியாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்

அவிநாசி, பிப்.15- அவிநாசி அருகே தெக்கலூரில்  கூலி உயர்வுப் பிரச்சனைக்குத் தீர்வு காண வலியுறுத்தி செவ்வாயன்று விசைத்தறி தொழிலாளர்கள், பாவு நூல் பிணைப்போர் உள்ளிட்டோர் கஞ்சித் தொட்டி திறந்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.  கோவை, திருப்பூர்  மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வுப் பிரச்சனைக்குத் தீர்வு காண வலியுறுத்தி கடந்த ஜனவரி 9 ஆம்  தேதி முதல் தொடர் வேலை நிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதற்கிடையே, கடந்த வாரம் ஜவுளி உற்பத்தியாளர்க ளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், பல்லடம் ரகத்துக்கு 15 சத விகிதமும், சோமனூர் ரகத்துக்கு 19  சதவிகிதமும் கூலி உயர்வு வழங்கு வதாகவும், 4 மாதங்கள் கழித்து  மீண்டும் கூலி உயர்வு வழங்கப்படு மெனவும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.  ஆனால், இதற்கான ஒப்பந் தத்தில் கையொப்பமிட ஜவுளி உற் பத்தியாளர்கள் மறுத்ததால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், தெக்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே விசைத்தறி தொழி லாளர்கள், பாவு நூல் பிணைப்போர்  உள்ளிட்டோர் விறகு அடுப்பு வைத்து கஞ்சித் தொட்டி திறந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த அவிநாசி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர்.