சேலம், ஜூலை 4- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சுவ ரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக பல்வேறு கண்டன சுவரொட்டி கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வருகிறது. அந்த வகை யில், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில், “எங்கள் அமைச்சரை நீக்க நீங்கள் யார்?” என்ற தலைப்பில் சுவரொட்டி கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், “மத்திய பாஜக அரசில் குற்றப்பின்னணி உள்ள 44 அமைச்சர்களை நீக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுத கிண்டி யாரே தயாரா?” என்று கேள்விகளும் அதில் இடம் பெற்றுள்ளன. சேலம் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.