கோவை, ஜன.5- கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பில், ஞாயிறன்று பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடை பெற்றன. கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளி வளாகத் தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் ஞாயிறன்று நடைபெற்றன. இதில் குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை அனைவரும் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் மன்றம் சார்பில் காலண் டர் மற்றும் டைரி வழங்கப்பட்டது. பொங்கல் விளை யாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன்ராஜ், பத்திரிகையா ளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.