சேலம், ஜூன் 8- குடிமராமத்து திட்ட பணியில் அரசி யல் பார்க்காமல், தொடர்ந்து செயல் படுத்தியிருந்தால் தற்போது மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை வந்திருக்கும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங் கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து, அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மாவட்டத்திலுள்ள திருமணி முத்தாற்றில் சாயக்கழிவுகள் கலப் பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த தேதிக்கு முன்னதாக மேட்டூர் அணையை திறந்தும் கூட டெல்டா மாவட்ட விவ சாயிகளுக்கு பயனில்லை. அணை யிலிருந்து குறைந்தபட்சம் வினா டிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் தண் ணீர் திறந்தால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் வந்தடையும். குடி மராமத்து திட்ட பணியில் அரசியல் பார்க்காமல் தண்ணீர் தடையின்றி வரு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும். தண்ணீரை எதிர்பார்த்து இது வரை குறுவை சாகுபடியை தொடங் காமல் இருக்கும் விவசாயிகள் விரைந்து சாகுபடியை தொடங்க ஏது வாக காலம் தாழ்த்தாமல் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீ ரின் அளவை உடனடியாக அதிகரிக்க வேண்டும். கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையை மேலும் தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத் தில் ஈடுபடுவோம், என்றார்.