districts

img

மூட்டை தூக்கும் தொழிலாளி மீது சாதிய வன்மத்துடன் கொடூர தாக்குதல்

இளம்பிள்ளை, பிப்.2- ஆட்டையாம்பட்டி அருகே சாதிய வன் மத்துடன் மூட்டை தூக்கும் தொழிலாளியை தாக்கியவரை கைது செய்யக்கோரி உறவி னர்கள் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றி யம், ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள  சாக்ரடீஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மூட்டை தூக்கும் தொழிலாளி குமார் (40). தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு வெண்ணிலா (35) என்ற மனைவியும், கௌஷிக் (14), சதிஷா (9) என இரு குழந் தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜன.29 ஆம் தேதியன்று ஆட்டையாம்பட்டி டிவிடி தெருவில் வசிக்கும் ஆதிக்க சாதி யைச் சேர்ந்த செல்வம் மகன் பிரகாஷ் (37) என்பவரிடம் மூட்டை தூக்க சென்றுள் ளார்.  அப்போது, குமாருக்கு தீடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வீட்டிற்கு திரும்ப சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், குமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த குமார், சேலம் அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அதேநேரம், இதுதொடர்பாக குமார் அளித்த புகாரின்பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் சாதாரண பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத்தொ டர்ந்து, செவ்வாயன்று குமாரின் உறவினர் கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப் போது, சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கு தல் நடத்திய பிரகாஷ் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி னர்.  இதையடுத்து அவர்களை காவலர் கள் சமதானப்படுத்தி நிலையில், குமாரின் மனைவி வெண்ணிலா, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்திடக் கோரி மீண்டும் ஒரு புகார் மனுவினை காவல் நிலையத்தில் அளித்தார். இந்த இரு புகாரின் பெயரில் சேலம் மாவட்ட ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி மற்றும் ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வா ளர் (பொ) ரஜினி ஆகியோர் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.