ஈரோடு, மே 24- சென்னிமலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகளை கீழே தள்ளி நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் ரங்கம்பாளையத்தினை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி (43). இவரது கணவர் இறந்து விட்டார். இவ ருக்கு பிரபாவதி (17) என்ற மகள் உள்ளார். பிரபாவதி சென்னிமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். ஜெகதீஸ்வரி திங்களன்று மதியம் இரு சக்கர வாகனத்தில் தனது மகள் பிரபாவதியுடன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னிமலையை அடுத்துள்ள ராமலிங்கபுரம் நொய்யல் பாலம் அருகே சென்றபோது , அவ ரின் பின்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வேக மாக வந்து ஜெகதீஸ்வரியின் இருசக்கர வாகனத்தில் மோதி கீழே தள்ளியுள்ளார். இதன்பின்னர், ஜெகதீஸ்வரி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், சென்னிமலை போலீ சார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.