districts

img

தமிழக முதல்வரை சந்திக்க சைக்கிள் பயணம் நூற்பாலை தொழிலாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை

சேலம், மே 23- சேலம் வருகை தரும் தமிழக முதல்வரை சந்திக்க சைக்கிள் பய ணமாக சென்ற நூற்பாலை தொழி லாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற் பட்டது. சேலம் அம்மாபேட்டை பகுதி யில் செயல்பட்டு வந்த அம்மா பேட்டை கூட்டுறவு நூற்பாலை கடந்த 18 ஆண்டுகளாக  இயங்கா மல் உள்ளது. அந்த நூற்பாலையில் 252 தொழிலாளர்கள் நிரந்தர பணி யில் இருந்தனர். இச்சூழலில் தற் போது தமிழக முதல்வர் சேலம் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா  அமைக்கப்படும் என தெரிவித்துள் ளார். இதற்கு நன்றி தெரிவிக்கவும், அம்மாபேட்டை பகுதியில் இயங்கி  வந்த  நூற்பாலையை  மீண்டும்  இயக்க வலியுறுத்தியும், சேலம் செல்லியம்பாளையத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க  பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் முதல்வரை சந்திக்க சைக்கிள் பயணமாக நூற்பாலை தொழிலா ளர்கள் செல்ல முடிவு செய்தனர்.   அதன்படி, சேலம் அம்மா பேட்டை காமராஜர்  காலனி பகுதி யில் இருந்து முதல்வரை சந்திக்க இருசக்கர வாகனம், சைக்கிள் மூல மாக செல்ல தயாராகினர். அப் போது, காவல் துறையினர் அவர் களை தடுத்து நிறுத்தி பயணம் செய் யக்கூடாது என தெரிவித்தனர். இத னால் தொழிலாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம் பவத்தால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.