districts

img

காவல்துறை அராஜகம்: வருவாய்த்துறையினர் போராட்டம்

கள்ளக்குறிச்சி, ஆக.30- வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷி வந்தியத்தில் இம் மாதம் 8 ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முறையாக மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று ஆக்கிரமிப்புகளை அகற்றிய தனி வட்டாட்சியர் மனோஜ் முனியனை எவ்வித விசாரணையும் இன்றி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தற்காலிக பணி நீக்கம் செய்தார்.  மாவட்ட ஆட்சியரின் இந்த நட வடிக்கையை கண்டித்து தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று (ஆக.29) கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இரவு வரைக்கும் போராட்டம் நீடித்தது. இதையடுத்து, சங்கத்தின் நிர்வாகி கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்த காவல்துறையினர் திருமண மண்ட பத்தில் அடைத்து வைத்தனர். காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து புதனன்று (ஆக.30) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதே போல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில், வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பார்த்திபன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.