districts

img

இடதுசாரி சக்திகளை வலுப்படுத்துவோம் நவம்பர் புரட்சி தினத்தில் உறுதியேற்பு

திருப்பூர், நவ. 7 - இந்தியாவில் ஏழ்மை, ஒடுக்குமுறை, ஏற் றத்தாழ்வைக் களைய, தொழிலாளி வர்க்கத் தின் தலைமையில் விவசாயிகளுடன் கை கோர்த்து மக்கள் ஜனநாயக இந்தியாவை உருவாக்குவதற்கு, இடதுசாரி சக்திகளை வலுப்படுத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் கூறினார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டத் தலைமை அலுவலகமான தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக திங்க ளன்று, உலகில் சோசலிச சமுதாயத்தைப் படைத்துக் காட்டிய நவம்பர் புரட்சி தின கொடி யேற்று விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச்  செயலாளர் ஆர்.காளியப்பன் தலைமையில்  நடைபெற்ற இந்த விழாவில் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ் செங்கொ டியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது: உலகில் சூரியன் அஸ்தமன் ஆகாத சாம்ராஜ்யம் என்று சொல்லப்பட்ட பிரிட்டனில் நெருக் கடி முற்றியுள்ளது. அங்கு பதவியேற்ற பிரத மர் நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாத  நிலையில் 45 நாட்களில் பதவி விலகிவிட்டார். இலங்கையும் திவாலானதைப் பார்த்தோம். முதலாளித்துவத்தால் அடிப்படை பிரச்ச னைகளைத் தீர்க்க முடியாது என்பது உறுதி யாகி வருகிறது. இந்த நிலையில் பிரேசில் உள்பட பல  நாடுகளில் இடதுசாரிகள் மக்கள் ஆதரவுடன்  ஆட்சிக்கு வருவதைப் பார்க்க முடிகிறது.  இந்தியாவிலும் மாற்றத்தை ஏற்படுத்த  இடதுசாரிகளை வலுப்படுத்த வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் விவ சாயிகளுடன் அணி சேர்ந்து மக்கள்  ஜனநாயக இந்தியாவை உருவாக்குவோம். அதற்கு இடதுசாரி சக்திகளை வலிமைப்படுத் துவோம் என்று 105ஆவது நவம்பர் புரட்சி தினத்தில் உறுதியேற்போம். இவ்வாறு அவர்  கூறினார்.

முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.சுப்பிரமணியன் நவம்பர் புரட்சி உலகில் நிகழ்த்திய சாதனைகளை சுட்டிக் காட்டிப் பேசினார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சாவித்திரி,  ச.நந்தகோபால், ஆர்.மைதிலி, ப. லட்சுமி  உள்பட மாநகர, ஒன்றியக்குழு உறுப்பினர் கள், கட்சி அணியினர் பங்கேற்றனர். நிறை வாக அலுவலகக் கிளைச் செயலாளர் பா. சௌந்தரபாண்டியன் நன்றி கூறினார். தெற்கு மாநகரம் திருப்பூர் தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட  பி.ஆர்.நிலையத்தில்  மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்தார்.  தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் உள்பட கட்சி அணியினர் கலந்து கொண்ட னர். தென்னம்பாளையத்தில் மூத்த உறுப்பி னர் துரைசாமி செங்கொடியை ஏற்றி வைத் தார். வெள்ளியங்காடு கிளையில் தி.ச.குப்பு சாமி கொடியேற்றி வைத்தார். கல்லம்பாளை யத்தில் முன்னாள் கிளைச் செயலாளர் டி. மணி, கருவம்பாளையத்தில் கட்சி உறுப்பி னர் ஏ.வரதராஜன், கே.வி.ஆர். நகரில் முன் னாள் கிளைச் செயலாளர் டி.முருகேஷ் ஆகி யோர் செங்கொடியை ஏற்றி வைத்தனர். ஊத்துக்குளி

ஊத்துக்குளி வட்டத்தில் பல்வேறு இடங் களில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர்  புரட்சி தின கொடியேற்று விழா நடைபெற்றது.  குன்னத்தூர் பேருந்து நிலையத்தில் கிளைச்  செயலாளர் பா.சின்னசாமி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார்  செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற் றினார்.  பாப்பம்பாளையம் கட்சி கிளை சார்பாக  நவம்பர் புரட்சி தின கொடியேற்று நிகழ்ச்சி  நடைபெற்றது, கிளை செயலாளர் சுப்பிரமணி யம் கட்சி கொடியினையும், கட்சி கிளை உறுப் பினர் ராஜேந்திரன் வாலிபர் சங்க கொடியை யும் ஏற்றினார்கள். இதில் தாலுக்கா குழு உறுப்பினர் க.லெனின் கலந்து கொண்டு புரட்சி தினத்தை குறித்து பேசினார், மாதர்  கிளை செயலாளர் செல்வி கலந்து கொண் டார். செங்கப்பள்ளியில் மணி என்கிற சுப்பிர மணியம், ஒத்தப்பனைமேட்டில் விஜயன், நடுப்பட்டியில் மு.பழனிச்சாமி, எம்.தொட்டி பாளையத்தில் நாகராஜ், சாலப்பாளையத் தில் க.வெங்கடாசலம், அம்பேத்கர் நகரில் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நி கழ்வில் ஊத்துக்குளி தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, தாலுக்கா குழு உறுப் பினர் க.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு  நவம்பர் புரட்சி தினம் குறித்து உரையாற் றினர்.  பல்லடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன் றிய அலுவலகம் முன்பாக திங்களன்று காலை நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர் முருகசாமி செங்கொ டியை ஏற்றி வைத்தார். ஒன்றியச் செயலாளர்  ஆர்.பரமசிவம் உள்பட கட்சி அணியினர் கலந்து கொண்டனர்.