மேட்டுப்பாளையம், நவ.19- மேட்டுப்பாளையம் அருகே மோத்தே பாளையம் கிராமத்தில் நடமாடி வரும் சிறுத் தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் கிராமம் அமைந் துள்ளது. மலை அடிவார பகுதியில் அமைந் துள்ள இக்கிராமத்தில் கடந்த ஒரு மாத கால மாக மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தையொன்று அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் தோட்டப்பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு நாய் கள் மற்றும் ஆடுகளை தொடர்ந்து தாக்கி வேட்டையாடி வருகிறது. இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வந்த நிலை யில், அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரி வித்திருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை வனத்துறை யினர் நடத்திய ஆய்வில், அப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர். பின்பு சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து சிறுத்தை ஊருக்குள் நுழையும் பகுதியை கண்டறிந்து அப்பகுதியில் கூண்டு வைத்துள்ளனர். கூண் டுக்குள் சிறுத்தைக்கு பிடித்த இறைச்சி துண்டுகளை போட்டு வைத்து அதனை பிடிக்க அப்பகுதியில் கண்காணிப்பை தீவி ரப்படுத்தி உள்ளனர்.