மேட்டுப்பாளையம், ஜன.2 - மேட்டுப்பாளையம் அருகே அரசு மதுபான கடை மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகே உள்ள வெள்ளிக்குப்பம்பா ளையம் பகுதியில் (கடை எண்1811) அரசு மதுபான கடை செயல்பட்டு வரு கிறது. இந்த கடையின் மேற்பார்வை யாளராக விஜய் ஆனந்த் என்பவரும் விற்பனையாளராக கரியபெட்டன், குணசேகரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திங்க ளன்று மாலை கடையில் மதுபானங் களை விற்பனை செய்து கொண்டி ருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் கடையில் இருந்த ஊழி யர்களிடம் கடையின் எண்ணை கேட்டதாக கூறப்படுகிறது. கடை எண்ணை உறுதி செய்த பின்னர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து கடைக் குள் வீசி எறிந்துள்ளனர்.
இதனால் கடைக்குள் இருந்த மதுபான பாட்டில் கள் உள்ளிட்டவை தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில் கடையில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு உள்ளே இருந்த ஊழியர்கள் மூவ ரும் வெளியில் ஓடி வந்து உயிர் தப்பி னர். பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிய நிலை யில், கடையில் இருந்த தண்ணீர் மூலம் தீயை கட்டுப்படுத்த அங்கி ருந்தவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனாலும், 3 பெட்டி மதுபாட்டில்கள், கல்லா பெட்டியில் இருந்த பணம், டேபில்கள் உள்ளிட்டவை கருகி சேத மாகின. இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் அளிக்கப் பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் சம்பவம் குறித்து தடயங்களை யும், கண்காணிப்பு கேமரா காட்சி களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம் பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. ஏற்கனவே இக்கடையின் மேற் பார்வையாளர் விற்பனை பணத்தை வங்கியில் செலுத்த சென்றபோது, ஒரு கும்பல் கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறிக்க முயன்றதும், இதற்கு முன்பு ஒருமுறை இவரையே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட் டது குறிப்பிடத்தக்கது.