சேலம், ஜன.2- அரசுப்பள்ளி ஆசிரியரின் பணியிட மாற் றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அப்பள்ளி யைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் மனு அளித் தனர். சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராள மான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஏற்காடு அருகே உள்ள தழைச்சோலை பகுதியைச் சேர்ந்த முரளிந்திரன் என்பவர் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நி லையில், ஆசிரியர் முரளிந்திரனை பணியிட நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் உத்தரவிட்டார். முதன்மை கல்வி அலு வலரின் உத்தரவை எதிர்த்து, அப்பள்ளி யைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியரை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்தொடர்ச் சியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனை சந் தித்து மனு அளித்தனர். அதில், முரளிந்திரன் ஆசிரியருக்கு மீண் டும் அதேபள்ளியில் பணி வழங்க வேண்டும். அப்பொழுதுதான் மாணவ, மாணவிகள் பள் ளிக்கு வருவோம் என்று கூறுகிறார்கள். ஆகவே, உடனடியாக அவரின் பணியிடை மாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் அதே பள்ளியில் அவரை பணி அமர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.