அவிநாசி, ஏப்.25- அவிநாசி அருகே ஆட்டோ தொழிலாளியை அரி வாளால் வெட்டிய இந்து முன்னணி பிரமுகரை கைது செய் யக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொது மக்கள் புகார் மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம், ஆட்டையம்பாளையத்தில் ஆட்டோ தொழிலாளியான கந்தசாமி (40) என்பவரை இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதர், அழகு பாண்டி மற்றும் மற்றொரு நபர் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த தரணிஷ் என்ற இளைஞருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இருவரும் அரசு மருத்து வமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவிநாசி - கோவை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதைத்தொடர்ந்து திங்களன்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட துணை காவல் கண் காணிப்பாளர் பவுல்ராஜை சந்தித்து குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்த னர்.