districts

நிதி ஒதுக்கிய பள்ளியின் கட்டுமான பணியை துவங்குக

உடுமலை, மார்ச் 19- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளியின் கட்டுமான பணிகளை உடனே துவங்குமாறு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தினர் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, உடுமலை தாலுகா,  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் மலைவாழ் மக்கள் குடியி ருப்புகள் உள்ளன. குறிப்பாக, குழி பட்டி மற்றும் குருமலை ஆகிய  பகுதிகளில் மலைவாழ் மக்கள்  வசிக்கின்றனர். இப்பகுதியில்  உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் இடித்து விழும் நிலை யில், மாற்றுக் கட்டடம் கட்ட  வேண்டுமென கடந்தாண்டு தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின்  சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டது.  இதையடுத்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மலைவாழ் குடி யிருப்பான குழிபட்டி மற்றும் குரு மலை பகுதிகளில் உள்ள  பள்ளி கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தனர். இதற்கு  மாவட்ட வன அலுவலர் தலைமை யிலான வன உரிமைக்குழு கூட்டத் திலும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில்,  ஆறு மாதங்கள்  கடந்த நிலையில் பள்ளிக்கு கட்டடம்  கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இப்பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டால் குழி பட்டி, குருமலை, மேல்குருமலை,  கரிமுட்டி மற்றும் பூச்சிகொட்டாம் பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  மாணவர்கள் பயன் பெறுவார்கள்.  எனவே, நிதி ஒதுக்கீடு செய்த  பள்ளி கட்டடங்களுக்கான கட்டு மான பணிகளை விரைவில் தொடங்க வேண்டுமென மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.