districts

புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தது - கோவை போலீஸ் அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி

கோவை, அக். 6 -  புனரமைப்பு பணிகள் நிறைவ டைந்துள்ளதால், கோவை ரயில்  நிலையம் எதிரே உள்ள போலீசார் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள் ளது. கோவை ரயில் நிலையம் எதி ரில் தமிழ்நாடு காவல்துறையின் பரா மரிப்பில் ஹமில்டன் கிளப் அமைந் துள்ளது. இந்த போலீஸ் அருங்காட்சி யகத்தில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் இடம் பெற்றுள் ளது. இதனை புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின் நிறைவுப்பகுதி யில் பணிகள் முழுமையாக முடிக் கப்பாடமலேயே  அவசர அவசரமாக அன்றைய முதல்வர் எடப்பாடி பழ னிச்சாமி திறந்து வைத்தார். இதன் பின்னர் பொதுமக்கள் பார்வை யிட அனுமதித்தனர். பின்னர் சிறிது நாட்களிலேயே மீண்டும் புனரமைக் கும் பணியை துவக்கினர். இதன் கார ணமாக பொதுமக்கள் பார்வையிட  அனுமதி நிறுத்திவைக்கப்பட்டிருந் தது. தற்போது பணிகள் முழுமை யாக நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப் படுவதாக கோவை மாநகர காவல் துறையின் செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழக் கிழமை  முதல் (திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும்) பொது மக்கள் பார்வைக்கு காலை 10 மணி  முதல் இரவு 7 மணி வரை அனுமதி யளிக்கப்படுகிறது. அருங்காட்சிய கத்தின் முழு பயனைப் பெறக்கூடிய  வகையில் இலவச “வழிகாட்டு பய ணம்” கீழ்கண்ட நேரங்களில் நடத் தப்படும். காலை 

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
மதியம் 12.30 மணி முதல் 01.30 மணி வரை
மதியம் 03.00 மணி முதல் 04.00 மணி வரை
மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை

ஒவ்வொரு வாரமும் சனி மற்றம் ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் பேண்ட் வாத்தியம், மோப்ப நாய் கண்காட்சிகள் ஆகியவை  மாலை 6  மணி முதல் 7 மணி வரை நடத்தப் படும். வார நாட்களில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை திறந்த வெளிக் கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக் கும் வாடகை அடிப்படையில் கொடுக்கப்படும். மேலும் பார்வை யாளர்களுக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10 மட்டும் வசூலிக்கப் படும்.  இதில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பார்வையா ளர்கள் கட்டணம் இலவசம். அரசு  சாரா மற்ற தனியார் பள்ளி மற்றும்  கல்லூரி மாணவ, மாணவியர்க ளுக்கு பார்வையாளர்கள் கட்ட ணமாக ஒரு நபருக்கு ரூ.5 மட்டும்  வசூலிக்கப்படும். இந்த வாய்ப்பினை  பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல் லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.