அவிநாசி, டிச.27- அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக் கோரி செம்பியநல்லூர் ஊராட்சி மன்ற அலு வலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிர தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சாய் கார்டன், வாரி கார் டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. இப்பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, குடி நீர் வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு, உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட் டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து, அடிப்படை பிரச்சனைக ளுக்கு தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி அப்பகு தியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசி காவல்துறையினர், வட் டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அப்பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இதர கோரிக்கைகள் குறித்து உடனடியாக நிறை வேற்றப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.