districts

img

வாலிபர் சங்கம் சார்பில் ‌மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா

அவிநாசி,ஜன.23- அவிநாசி அருகே காட்டுவளவு பகு தியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் சார்பில் மக்கள் ஒற்றுமை விளை யாட்டு விழா நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் வடுகபாளையம் ஊராட்சிக்குட் பட்ட காட்டுவளவு கிளை சார்பில் மக்கள்  ஒற்றுமை விளையாட்டு விழா நடைபெற் றது. இதில் இசைப்பந்து, தவளை ஓட் டம், பலூன் ஊதி உடைத்தல், சாக்கு ஓட் டம், லெமன் ஸ்பூன், கம்மஞ்சோறு, மியூ சிக்கல் சேர், லக்கி கார்னர் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த விளை யாட்டுப் போட்டிகளை வாலிபர் சங்கத் தின் கிளைத் தலைவர் ஆர்.தங்கராஜ்  தலைமையேற்று நடத்தினார். இதனைத் தொடர்ந்து மாலை நடை பெற்ற பரிசளிப்பு விழா பொதுக்கூட்டத் தில் மாவட்டத் தலைவர் எஸ்.அருள்,  மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.நவநீதன், முன்னாள் விதொச ஒன்றியத் தலைவர் மல்லப்பன், மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் செல்வி, ஒன்றிய கவுன்சிலர் முத் துசாமி, முன்னாள் பேரூராட்சி கவுன் சிலர் அவிநாசி வேலுச்சாமி, வாலிபர் சங் கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர்  பாலசுப்பிரமணியம், ஒன்றியத் தலைவர்  சந்தோஷ்குமார், ஒன்றியச் செயலாளர் ஹனீபா, மாணவர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன், வாலிபர் சங்க முன்னாள் ஒன்றியச்  செயலாளர் பழனிச்சாமி, விவசாய சங்க  மாவட்டத் துணைத்தலைவர் வெங்கடா சலம், சிஐடியு பொதுத்தொழிலாளர் சங் கத்தின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் பழனிசாமி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு  உறுப்பினர் கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.