districts

img

தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து கொடுத்திடுக - ததீஒமு வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 10- உங்கரான அள்ளி கிராம தலித்  மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக் கான இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள் ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் தருமபுரி வட்ட 4 ஆவது மாநாடு முத்து இல்லத்தில் வட்ட தலை வர் டி.மாரியப்பன்‌ தலைமையில் நடை பெற்றது. ஒன்றியகுழு உறுப்பினர் எஸ்.காளியப்பன் முன்னிலை வகித் தார். மாநாட்டை மாவட்ட தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன் துவக்கி வைத்து  உரையாற்றினார். வேலையறிக் கையை வட்ட செயலாளர் கே.கோவிந் தசாமி முன்வைத்தார். இதில், அமைப் பின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தமிழ்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற் றும் கலைஞர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் நாகைபாலு ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், சாதி ஆணவப்படு கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். தொப்பூர் அருந்ததி யர் மாணவர் மீது கொலைவெறி தாக் குதல் சம்பவத்தில் சிபிசிஐடி விசார ணைக்கு உத்தரவிட வேண்டும். குற்ற வாளிகளை வன்கொடுமை தடுப்பு சட் டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தருமபுரி வட்டம், உங்கரான அள்ளி தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட் டுமனை பட்டாக்களுக்கான இடத்தை அளந்து கொடுக்க வேண்டும். தலித் ஊராட்சி தலைவர்களுக்கு மாதந்தோ றும் மதிப்பு ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து அமைப்பின் வட்ட தலைவராக  டி.மாரியப்பன், வட்ட  செயலாளராக கே.கோவிந்தசாமி, பொருளாளராக ரங்கநாயகி உட்பட 11 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு  செய்யப்பட்டது. முடிவில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செய லாளர் வழக்கறிஞர் டி.மாதையன் நிறைவுறையாற்றினார். இதில், ஏராள மானோர் கலந்து கொண்டனர்.