கோவை, ஜுன் 3- தென்னை, பனைமரத்திற்கான மரம் ஏறும் மற்றும் அறுவடை இயந்தி ரத்திற்கான வடிவமைப்பு காப்புரி மையை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக் கப்படும் மரம் ஏறும் மற்றும் அறுவடை இயந்திரத்திற்கான வடிவமைப்பு காப்பு ரிமை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப் பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்தால் இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காப்புரிமையைப் பெற்ற வர்கள் மேற்கொண்ட முயற்சிக ளுக்குப் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனை வர் வெ.கீதாலட்சுமி பாராட்டு தெரிவித் துள்ளார். இக்கருவியில் மரம் ஏறுதல் மற்றும் அறுவடை செய்தல் என இரு பாகங்கள் உள்ளன. மரம் ஏறும் பாகத் தில் பிரத்தியேகமாக வடிமைக்கப்பட்ட ரப்பர் சக்கரங்கள் ஒரு வட்டவடிவ சட்டத்தில், மரத்தின் சுற்றளவுக்கு ஏற்ப மாற்றி கொள்ளத்தக்க வகையில் பொருத்தப்பட்டுள்ளன. மேலே ஏறும் சக்கரங்கள் டிசி ஸ்டெப்பர் மோட் டார் மூலம் இயக்கப்படுகிறது. அனைத்து மோட்டார்களும் லித்தியம் மின் கலனால் இயக்கப்படுகிறது. ரிமோட்டின் டிரான்ஸ்மிட்டரிலிருந்து ரேடியோ அதிர்வெண் சமிக்ஞை ரிசீவர் அமைப்பிற்கு அனுப்பி கருவி இயக் கப்படுகிறது.