districts

img

முன் அறிவிப்பின்றி மூடுவதாக அறிவித்த தனியார் பள்ளி

திருப்பூர் ஜூலை 13-   திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே  உள்ள தனியார்ப் பள்ளியை முன் அறிவிப் பின்றி மூடுவதாக செல்போன் மூலம் அறி வித்ததையடுத்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் பொள்ளாச்சி பிரதானம் சாலையில் ஸ்காட்  சர்வதேச பள்ளி 10.08.2012 ஆம் தேதி தொடங் கப்பட்டது. இதனை அப்போதைய தமிழக ஆளுநர் ரோசய்யா திறந்து வைத்தார். இப் பள்ளியில் தொடக்கத்தில் 500க்கும் மேற்பட்ட  மாணவ,மாணவிகளுடன் இயங்கி வந்தது. அதன் பின் படிப்படியாக மாணவர் சேர்க்கை  குறைந்து தற்போது பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட  மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வரு கின்றனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கை இல் லாததால் பள்ளியைத் தொடர்ந்து நடத்த  இயலாது அதனால் இன்று முதல் பள்ளி செயல்படாது என்று திங்களன்று மாலை பெற் றோர்களுக்கு செல்போன் மூலம் ஆசிரியர் கள் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்  சுமார் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு  வந்து முற்றுகையிட்டனர். இது குறித்து  தகவல் அறிந்து வந்த காமநாயக்கன்பாளை யம் காவல் ஆய்வாளர்  ரவி, துணை ஆய்வா ளர் மணிமுத்து உள்ளிட்ட காவலர்கள்  பெற் றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  

இது குறித்துப் பெற்றோர் கூறுகையில், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவர்  சேர்க்கை நிறைவடைந்து கல்வி கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எங்களது குழந்தைகள் படித்து வந்த ஸ்காட்  பள்ளியை உடனடியாக மூடுவதாக அந்த நிர் வாகம் கூறுகிறது. எங்களது குழந்தைகளை வேறு நல்ல பள்ளியில் உடனே சேர்க்க இய லாது. நடப்பு கல்வி ஆண்டு மட்டும் இப்பள் ளியை இயக்கி அதன் பின்னர் பள்ளியை மூடி னால் நாங்கள் வேறு நல்ல பள்ளியைத் தேர்வு  செய்து அதில் அடுத்த கல்வியாண்டில் எங்க ளது குழந்தைகளைச் சேர்க்க இயலும். பள் ளியை மூடுவது குறித்து முன்கூட்டியே தகவல் கொடுப்பதோடு உரிய கால அவகாச மும் அளிக்க வேண்டும். உடனே பள்ளி மூடு வது எங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பும், எதிர்காலமும் கேள்வி குறியாகும்.  எங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்கா கத் தான் நாங்கள் கல்விக்காக ஆண்டு ஒன் றுக்கு ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவு  செய்கிறோம். குழந்தைகளின் நலனுக்காக நாங்கள் போராடவும் தயங்க மாட்டோம் என்ற னர்.  இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து பள்ளியை 2 நாள் நடத்துவதாக வும், 2 நாட்களுக்குள் தலைமை நிர்வாகத்தி டம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப்  பெற்றோர்களுடன் ஆலோசனைக் கூட்டம்  நடத்துவதாகவும் தெரிவித்தனர். இதைய டுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற முற் றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.