நாமக்கல், செப்.16- நாமக்கல் மாநகராட்சி நிர்வா கத்தின் சேவை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயி ரம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே உள்ள கருவேப் பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த் திகேயன் என்பவரின் மனைவி எஸ். தமிழ்ச்செல்வி (56). இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு நாமக்கல் நகராட் சியாக இருந்தது. தற்போது மாநக ராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள் ளது. அதன்படி, மாநகராட்சி எல் லைக்குள் உள்ள 3,200 சதுர அடி பரப்பு காலியிடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட காலி மனை இடங் களுக்கான வரன்முறைபடுத்துதல் திட்டத்தின் கீழ், விண்ணப்பப்பதிவு கட்டணமாக ரூ.500 செலுத்தி, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தேவையான ஆவணங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்ச்செல்வி சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து இவரின் அங்கீகரிக் கப்படாத வீட்டுமனை இடத்தை அங்கீகரிப்பதற்கான ஒப்புதலுக் காக, மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகத் திற்கு, மாநகராட்சியின் சார்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள் ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம், வரன்முறைபடுத்துதல் கட்ட ணம் மற்றும் வளர்ச்சி கட்டணத் தைப் பெற்றுக் கொண்டு, வரன்மு றைபடுத்துவதற்கான ஆணையை வழங்குமாறு நாமக்கல் மாநகராட் சிக்கு நகர ஊரமைப்பு உதவி இயக் குநர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. இதையடுத்து தமிழ்ச்செல்வி யும், அவரது கணவரும் மாந கராட்சி அலுவலகத்தை பலமுறை அணுகி கேட்டபோது, சரிவர பதில் அளிக்கவில்லை. மாநகராட்சி அலுவலர்கள் வரன்முறைபடுத்து வதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்யுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி காலி மனை இடத்திற்கு வரன்முறைப்ப டுத்தி ஆணை வழங்குமாறு, விண் ணப்பப்பதிவு கட்டணத்தை மீண்டும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், செலுத்தி ஆவ ணங்களை மாநகராட்சி அலுவல கத்தில் தமிழ் செல்வி சமர்ப்பித்துள் ளார். இரண்டாவது முறையும் தமிழ்ச்செல்வியின் விண்ணப் பத்தை ஏற்றுக் கொண்டு வரன்மு றைப்படுத்துவதற்கான கட்டணத் தையும், வளர்ச்சிக் கட்டணத்தை யும் பெற்றுக் கொண்டு வரன்மு றைபடுத்துதல் ஆணை வழங்கு மாறு மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் நாமக்கல் மாநக ராட்சிக்கும், தமிழ் செல்விக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மாநக ராட்சியில் வரன்முறை கட்டணம் ரூ.26,820, வளர்ச்சி கட்டணம் ரூ.74,500, கொடி நாள் நிதி ரூ.500 ஆகியவற்றை தமிழ்ச்செல்வி செலுத்தியுள்ளார். உரிய கட்டணங்களை செலுத் திய பின்னரும் காலி மனை இட வரன்முறைபடுத்துதல் ஆணையை மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்பதால், தமிழ்ச்செல்வி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மாநக ராட்சி சார்பில் தமிழ்செல்வியின் கட்டிட பொறியாளரிடம் வரன் முறைபடுத்துதல் ஆணையை வழங்கி விட்டோம் என்று வாதிடப் பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப் பினர்கள் ஆர்.ரமோலா, என்.லட்சு மணன் ஆகியோர் திங்களன்று வழங்கிய தீர்ப்பில், நாமக்கல் மாநகராட்சி சேவை குறைபாடு புரிந்துள்ளதாக தீர்ப்பளித்துள்ள னர். மேலும், தமிழ்ச்செல்வி முதல் முறையாக வரன்முறைப்படுத்து வதற்கு விண்ணப்பித்த போது, நகர ஊரமைப்பு அலுவலகம் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை முறையாக விண்ணப்பம் செய்தவ ருக்கு நாமக்கல் மாநகராட்சி தெரி விக்கவில்லை என்பதும், இரண்டா வது முறையாக தமிழ்ச்செல்வி யால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப் பம் நகர ஊரமைப்பு அலுவலகத் தால் ஒப்புதல் வழங்கப்பட்டு, உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்ட பிறகும் தமிழ்ச்செல்விக்கு வரன் முறைபடுத்துதல் ஆணை வழங்கப் படவில்லை என்பதும் சாட்சியங் கள் மூலமும், ஆவணங்கள் மூல மும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத னால், வழக்கு தாக்கல் செய்தவ ருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை நான்கு வாரங்க ளுக்குள் வழக்கு தாக்கல் செய்தவ ருக்கு வழங்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.