districts

img

கோவை - திருச்சி சாலை மேம்பாலத்தில் மீண்டும் ஒரு விபத்து; வாலிபர் உயிரிழப்பு

கோவை, ஜூ1லை 14- கோவை - திருச்சி சாலையில் மேம் பாலம் திறக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், வியாழனன்று 3 ஆவது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய வாலிபர் பரிதாபமாகப் உயிரி ழந்தார். இதனால் இந்த பாலத்தில் பய ணித்து உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கோவை - திருச்சி சாலையில் போக் குவரத்து நெரிசலை குறைக்கும் வித மாக ரெயின்போ காலனி முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர்  தொலைவுக்கு ரூ.253 கோடி மதிப்பீட் டில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை ஜூன் மாதம் 11 ஆம் தேதி  திறக்கப்பட்டது.  இப்பாலத்தில் ஒரு சில தினங்களி லேயே அடுத்தடுத்த இரண்டு விபத்து கள் நடைபெற்றன. இதில் இரண்டு பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு வாலிபர் பாலத்தில் இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந்தபோது, வாக னம் கட்டுப்பாட்டை இழந்ததில் பாலத்தி லிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்ப வம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எதிர்காலத் தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கா மல் தடுக்க உரிய முன் எச்சரிக்கை நடவ டிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் உத்தரவிட்டார்.  அதன்படி போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன், மேம்பாலத் தில் ஆய்வு மேற்கொண்டு, ஜூன் 28 ஆம் தேதியன்று இந்த பாலத்தில் வேகத் ைகள், உரிய இடத்தில் பேரி கேட்டுகள், ஒளிரும் பட்டைகள் அமைக்கும் பணி கள் நடைபெற்றன. இதன் காரணமாக பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் திறக்கப்பட்ட இந்த பாலம் மூடப்பட்டதால் பொது மக்கள் கவலையடைந்தனர்.  

இதனிடையே கோவை - திருச்சி ரோடு மேம்பாலத்தில் உக்கடம் நெடுஞ் சாலையில் மேம்பாலத்தின் இயங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் எதிர்த்திசையில் வாகனங்களில் செல்லக் கூடாது. பாலத்தில் நேராக செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்தி லும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண் டும்  என்ற அறிவிப்புப் பலகைகள் வைக் கப்பட்டது. மேலும். 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இப்பாலத்தில் 10 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து மூடப்பட்டிருந்த இப்பாலம் கடந்த ஜூலை 9 ஆம் தேதியன்று மீண் டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், பாலம் திறக்கப் பட்டு ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் மேம்பாலத்தில் மீண்டும் ஒரு விபத்து வியாழனன்று நடைபெற் றுள்ளது.  கோவை தாமஸ் வீதியை சேர்ந்த ஆனந்தகுமார் (51) என்பவர் கோவை அரசு மருத்துவமனையிலி ருந்து ராமநாதபுரம்  நோக்கிச்சென்றார். அவர் கோவை - திருச்சி சலை மேம்பா லத்தில் பயணிக்கையில், சுங்கம் அருகே சென்றபோது மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட வேகத்தடையில் ஏறிய தில் வாகனம் நிலை தடுமாறியது. இதில்,  அவர் தூக்கியெறியப்பட்டு பாலத்திலி ருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டு, தொடர் விபத்துக்கள் நடப்பதை தவிர்ப் பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடப்பது கோவை மக்களிடையே அதிர்ச்சியை யும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.