திருப்பூர், மார்ச் 5 - இடுவாய் ஊராட்சி பாரதிபுரத்தில் உள்ள சமுதாய நல கூட வளாகத்தில் ஞாயிறன்று காலை 10.30 மணிக்கு இடுவாய் ஊராட்சியில் உள்ள சுய உதவி குழு பெண்களின் சார்பாக சர்வ தேச மகளிர் தின நிகழ்ச்சி நடை பெற்றது. இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மணி, கணேசன், ஊராட்சி செயலாளர் நாகராஜ் உள் ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளையும் வழங்கினர்.