districts

img

குடியிருப்புகள் அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

சேலம், ஏப்.22- சேலம் மாநகராட்சி பகுதியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதி பொதுமக்கள் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். சேலம் மாநகராட்சி, 4 ஆவது வார்டுக்குட்பட்ட நகரமலை அடிவா ரம் அருகே உள்ள ராமன் குட்டை பகு தியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவ சாயம் உள்ளது. இந்நிலையில், மாந கராட்சி பகுதியில் சேகாரமாகும் குப் பைகளை வைத்து, உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாந கர பகுதிகளில் கிடங்குகள் அமைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரமாக மாற்றும் பணி கள் நடைபெற்று வருகிறது. அதன் படி நகரமலை அடிவாரம் அருகே உள்ள ராமன் குட்டை பகுதியில் குப் பையிலிருந்து உரம் தயாரிக்கும் கிடங்கு கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப் பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி குழந்தைகளுடன் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் குடியிருந்து, விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், மாநக ராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை களை கொண்டு வந்து கொட்டி, எங் கள் பகுதியில் உரம் தயாரிக்கும் கிடங்கு அமைத்தால் துர்நாற்றம் வீசி  சுகாதார சீர்கேடு ஏற்படும். மேலும், நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படும். இப்பகுதியில் தனி யார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள தால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிடங்கை வேறு இடத் திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.