தாராபுரம், மே 5 - தாராபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை கண் டித்து செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். தாராபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத் துவ அலுவலராக பணியாற்றுபவர் கணேஷ் குமார். இவர் செவிலியர்களை தரக்குறைவாக பேசுவதுடன் ஆய்வு கூட்டம் என்று 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் செவிலியர்களை நிற்க வைத்து கூட்டம் நடத்துவதாக கூறப்படுகிறது. இதை கண் டித்து கிராம செவிலியர்கள் சங்க மாவட்ட தலைவர் பாலா மணி தலைமையில் தாராபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலை யத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. கோரிக்கை களை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் தமயந்தி பேசி னார். உள்ளிருப்பு போராட்டத்தை அடுத்து செவிலியர் சங்க நிர்வாகிகளுடன் வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி பேச்சுவார்த்தை ஈடுபட்டு சம்பந்தபட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக உறுதியளித் தார். இதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் கைவிடப் பட்டது.