திருப்பூர், நவ.5 - திருச்சியில் கொலை வெறி தாக்குதலுக்கு உள் ளான செவிலியருக்கு நீதி வழங்க வலியுறுத்தி தமிழ் நாடு எம்ஆர்பி செவிலியர் கள் மேம்பாட்டுச் சங்கத்தி னர் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சியில் அக்.31ஆம் தேதி பணி முடித்து வீடு திரும்பிய செவிலியரை சமூக விரோதி ஒருவன் வன் புணர்வு செய்ய முயற்சித்துள்ளான். இந்த கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான செவிலியருக்கு நீதி வேண்டியும், பெண் ஊழி யர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறு திப்படுத்த வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம் பாட்டு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மீனா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராணி, மாவட்ட துணைத் தலைவர் மதன், மாதர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்கள் ஏ.ஷகீலா, சி.பானுமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். எம். ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் பெஜாக்சின் நிறைவுரையாற்றினர். திலகவதி உள்பட திரளான செவிலியர்கள் பங்கேற்றனர். மாவட்ட இணைச்செயலாளர் அமிர்த வர் ஷினி நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர்.