நீலகிரி மாவட்டம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், தலைக்குந்தா, இந்துநகர், எச்.பி.எப், பட் பயர் மற்றும் தமிழக மந்து ஆகிய பகுதிகளில் சுகாதாரம், சுற்றுப்புற சூழல் மற்றும் கல்வியின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தினர். இம்முகாமில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆ.ரோசில்டா மஞ்சு, பேராசிரியர்கள் ப. கல்பனா, க.தவமணி, அ.முத்தரசி உள்ளிட்டோர் ஒருங்கினைத்தனர்.