districts

தருமபுரி - மொரப்பூர் புதிய ரயில்பாதை திட்டம்: நிலம் அளவீடு நிறைவு

தருமபுரி, டிச.6- தருமபுரியிலிருந்து மொரப்பூ ருக்கு புதிய ரயில்பாதை அமைக்க நிலம் அளவீட்டுப் பணிகள் நிறைவ டையும் நிலையில் உள்ளதாக தரும புரி நாடாளுமன்ற உறுப்பினர் டி. என்.வி.எஸ்.செந்தில்குமார் தெரி வித்தார். தருமபுரி ராமக்காள் ஏரி ஏருகே தருமபுரி - மொரப்பூர் ரயில்பாதை அமைய உள்ள இடத்தை திங்க ளன்று வருவாய்த்துறை அதிகாரி கள், டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் எம்.பி., உள்ளிட்டோர் நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தனர்.  தருமபுரியிலிருந்து மொரப்பூ ருக்கு புதிய ரயில் பாதை அமைப்ப தற்கான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்காக, தரும புரியிலிருந்து மொரப்பூர் வரையி லான புதிய ரயில் பாதை அமைய உள்ள இடத்தை தேர்வு செய்து நிலம் அளவீட்டுப் பணிகள் வரு வாய்த்துறை அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர். இந்த பாதை 30 கி.மீ. தொலைவு அமைய உள்ளது. இதில், தருமபுரி நகரை யொட்டி மட்டும் 8 கி.மீ.தொலை வுக்கு நிலம் கையகப்படுத்த வேண் டிய நிலை இருந்தது. இதில், ஏராள மான குடியிருப்புகள் அமைந்துள் ளன. இதனால், இந்த இடத்துக்கு பதிலாக மாற்று இடம் நகரின் அரு காமையில் தேர்வு செய்யப்பட்டது. இந்த மாற்று வழியில் 3 கி.மீ. தொலைவு குறைந்துள்ளது. இத னால், 5 கி.மீ.தொலைவுக்கு நிலம் கையகப்படுத்தினால் போதுமா னது என முடிவு செய்யப்பட்டு நிலம் அளவீட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து தருமபுரி நாடாளு மன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார் கூறுகையில், தற் போது நிலம் அளவீடு செய்துள்ள தில், சவுளுப்பட்டியில் 27 வீடுகள்,  மூக்கனூரில் 77 வீடுகள் அமைந் துள்ளது.

எனவே, இந்த பகுதிகளில் நிலம் கையகப்படுத்தக் கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். எனவே, குடியிருப்புக ளுக்கு பாதிப்பின்றி நிலம் கையகப் படுத்த வேண்டும் என ரயில்வே  துறையிடம் எடுத்துரைக்கப்பட்டுள் ளது. மக்களின் கோரிக்கை ஏற்க  வலியுறுத்தி நேரில் ரயில்வே துறை அதிகாரிகளிடம் சந்தித்து எடுத்து ரைக்கப்படும். ஏறத்தாழ நிலம் அள வீட்டுப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. சவுளுப்பட்டி, மூக்கனூர் தவிர மீதமுள்ள இடங் களில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்க ரயில்வேத்துறையிடம் கோரப்படும். மக்களவைத் தேர்த லுக்கு முன்பு இப்பணிகள் நிறை வடையும். இதேபோல, தொப்பூர் கண வாய் தேசிய நெடுஞ்சாலை மேம் படுத்த, வனப்பகுதி நிலம் கைய கப்படுத்த வேண்டியுள்ளது. இப் பணிக்கு 6 ஹெக்டர் அரசு நிலமும், 3 ஹெக்டர் பட்டா நிலமும் தேவைப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை மேம்படுத்துவதற் கான தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசுகளின் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை பணிகள் முற் றாக நிறைவடைந்தவுடன் தொப்பூர் சாலை விபத்துகளற்ற சாலையாக மேம்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.