districts

சேறும், சகதியுமான உதகை தாவரவியல் பூங்கா

உதகை, மே 24- தொடர் மழையால் உதகை தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானம் சேறும், சகதியு மாக காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அத னைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்பின், 6 மாதங்களுக்கு மழை பெய்யாது. குறிப்பாக, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மழை பெய்யாது. இச் சமயங்களில் சமவெளிப் பகுதிகள் போன்று இங்கும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை யாரும்  எதிர்பார்க்காத நிலையில், கடந்த 15 நாட்க ளுக்கு மேலாக உதகையில் நாள்தோறும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த மே 19 ஆம் தேதி யன்று உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி துவங்கிய நாள் முதலே நாள் தோறும் மழை பெய்து வருகிறது. இத னால், தாவரவியல் பூங்காவில் உள்ள புல்  மைதானங்கள் அனைத்தும் சேறும், சகதியு மாக மாறியுள்ளன. இதனால், சுற்றுலா பய ணிகள் அவதிக்குள்ளாகினர்.