districts

img

கல்வராயன் மலைப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்திடுக மலைவாழ் இளைஞர் சங்க மாநாடு வலியுறுத்தல்

சேலம், ஜூன் 25- கல்வராயன் மலைப்பகுதி யில் அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என கல்வ ராயன் மலைப்பகுதியில் நடை பெற்ற மலைவாழ் இளைஞர்கள் சங்கத்தின் 5ஆவது மாதாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் இளை ஞர்கள் சங்கம் கல்வராயன்மலை 6  ஆவது மாநாடு, கல்வராயன் மலை சமுதாய கூடத்தில், மலைக் கமிட்டி தலைவர் சி.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. தலைவர் மணி வரவேற்றார். மாநாட்டை வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் பி.கந்தசாமி துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை மலைக்கமிட்டி செயலாளர் டி.தர் மலிங்கம், வரவு செலவு அறிக் கையை பொருளாளர் எ.சந்திய ராஜ் ஆகியோர் முன்மொழிந்த னர். இதில், மலைவாழ் மக்கள் சங்க மாநில பொருளாளர் எ. பொன்னுசாமி, மாவட்ட துணை செயலாளர் பி.ஆர்.மாதேஸ்வ ரன், வாலிபர் சங்க துணை செய லாளர் வி.பெரியசாமி ஆகியோர்  மாநாட்டை வாழ்த்தி உரையாற்றி னர்.  இதில், கல்வராயன் மலைப் பகுதியில் அடிப்படை வசதிகளை  மேம்படுத்தி தர வேண்டும். கிளாக் காடு முதல் நாய்குத்தி வரை பழு தடைந்த தார்சாலையை சீர் செய்ய  நடவடிக்கை எடுத்திட வேண்டும். கிணக்காடு, சின்னமாங்கோடு, குன்னூர், கலகாம்பாடி ஆகிய பகுதிகளில் பழுதடைந்த நிலை யில் உள்ள அங்கன்வாடி மைய  கட்டிடத்தை சீர்படுத்த நடவ டிக்கை எடுத்திட வேண்டும். குன் னூர் தாழ்வள்ளம் ஆகிய கிராமங் களில் நிழற்கூடம் அமைத்து தர  வேண்டும். குன்னூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள் ளிக்கு தார்சாலை அமைத்துதர வேண்டும். கருமந்துறையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத் தில் மருத்துவர்கள் 24 மணி நேர மும் பணியாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  முன்னதாக மாநாட்டில் மலைவாழ் இளைஞர்கள் சங்க தலைவராக பி.வெங்கடேஷ், செயலாளராக தர்மலிங்கம், பொருளாளர் சத்தியராஜ் உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்டனர். இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் வெங்க டேஷ் நிறைவுரையாற்றினார். மலைக்கமிட்டி துணை செயலா ளர் இ.தமிழரசன் நன்றியுரையாற் றினார்.