districts

img

மலையேற்ற வீராங்கனை சைக்கிள் பயணம்

சேலம், ஜன.9- பெண்களின் பாதுகாப்பை வலியு றுத்தி, மத்திய பிரதேச மலையேற்ற வீராங்கனை இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரிலிருந்து கடந்த ஆண்டு நவ.1 ஆம் தேதியன்று மிதிவண்டி பயணத்தை மலையேற்ற வீராங்கனை ஆசா மால்வியா (24) தொடங்கினார். இவர் 100 நாட்களில் 7 ஆயிரத்து 300 கிலோ மீட்டரை கடந்து, திங்களன்று சேலம் வந்தடைந்தார். அப்போது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பாலச்சந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலர்கள், ஆசா மால்வியாவிற்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர். சேலத்திலிருந்து புறப்பட்ட ஆஷா மால்வியா தருமபுரி செல்கிறார். தனது பயணம் குறித்து ஆஷா மால்வியா கூறுகையில், இதுவரை மத்திய பிரதேசம், குஜராத் மகாராஷ்டிரா, கோவா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என 7 மாநிலங்களைக் கடந்து  பயணத்தைத் தொடர்ந்து வருகிறேன். 252 நாட்களில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை விளக்கும் வகையில் எனது பயணம் அமைந்துள்ளது. கர்நாடகா, கேரளா முதலமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற நான், தமிழகத்திலும் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறேன். தமிழ்நாட்டை  பொறுத்தவரை பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில் சிறந்த மாநிலமாக உள்ளது, என்றார்.