districts

img

மின் இணைப்பு கேட்டு மலைவாழ் மக்கள் நூதன போராட்டம்

கோவை, ஏப்.9- மின் இணைப்பு வழங்கக்கோரி, மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் எரு மைப்பாறை மலைவாழ் மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்டைக்காரன்புதூர் பேரூ ராட்சி, 15 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதி மக்களுக்கு அடிப்படை வச திகள் செய்து தர வேண்டும். ஆனை மலையை அடுத்த எருமைப்பாறை கிராமத்தில் பொருத்தப்பட்ட மின் மாற்றி துருப்பிடித்து வீணாகும் முன் னமே, உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும், கோழிக முத்தி, கூமாட்டி செட்டில்மெண்டு களுக்கு டாப்சிலிப் முதல் பரம்பிக் குளம் மெயின் சாலையிலிருந்து நிலத் தடியில் புதைவட மின்வயர் இணைப்பு ஏற்படுத்தி மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாப்சிலிப் வனச்சரகர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு கே.பத்மினி தலைமை வகித் தார். இதில், தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்க ஆனைமலை தாலுகா தலை வர் கே.மணி, தாலுகா செயலாளர் ஆர்.தங்கவேல், வே.புதூர் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் எஸ்.சாத்துக் குட்டி, விதொச மாவட்ட செயலா ளர் ஏ.துரைசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரமசிவம், வாலி பர் சங்க செயலாளர் எம்.சுரேஷ் குமார், மாணவர் சங்க செயலாளர் சந் தியா உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு பயனற்றதாக உள்ள மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி  ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது.